Maninder singh
ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் இந்திய அணி அடுத்த கட்டத்திற்கு செல்லும் - மனீந்தர் சிங்!
சமீப காலமாக இந்திய அணியில் ரோஹித் சர்மாவின் பேட்டிங் மற்றும் கேப்டன்ஷிப் தொடர்ந்து கேள்விக்குள்ளாகி வருகிறது. ஆசிய கோப்பை டி20 தொடர், உலகக்கோப்பை டி20 தொடர் என தொடர் தோல்விகளால் இத்தகைய கேள்விகள் எழுந்துள்ளது. நியூசிலாந்து டி20 தொடரில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக பொறுப்பேற்று விளையாடினர். இவர் 2022 ஐபிஎல்லில் முதல் முறையாக பங்கேற்ற குஜராத் அணிக்கு முதல் முறையாக கேப்டன் பொறுப்பேற்று கோப்பையை பெற்றுதந்தார்.
அப்போதிருந்து பிசிசிஐ-க்கு இவர் மீது கவனம் இருந்தது. நியூசிலாந்து தொடரிலும் நன்றாக செயல்பட்டதால், இனி டி20 போட்டிகளுக்கு இவர்தான் கேப்டனாக இருப்பார் என பிசிசிஐ சொல்லாமல் சொன்னதாக பேசப்பட்டு வருகிறது. ஒருநாள் தொடரிலும் ரோஹித் சர்மா எதிர்பார்த்த அளவிற்க்கு விளையாடவில்லை.