Mayank agrawal
ரெஸ்ட் ஆஃப் இந்திய அணியின் கேப்டனாக மயங்க் அகர்வால் நியமனம்; தமிழக வீரருக்கு வாய்ப்பு!
கடந்த 2020-21ஆம் ஆண்டில் ரஞ்சி கோப்பையை வென்ற மத்தியப் பிரதேச அணிக்கும் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்குமான இரானி கோப்பைக்கான ஆட்டம் குவாலியர் நகரில் மார்ச் 1 அன்று நடைபெறவுள்ளது. இந்நிலையில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.
இந்திய அணியின் கேப்டனாக நட்சத்திர வீரர் மயங்க் அகவர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். அதேசமயம் நட்சத்திர வீரர் சர்ஃபராஸ் கானுக்கு விரலில் காயமடைந்ததால் அவருக்குப் பதிலாக பாபா இந்திரஜித் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்கிற கூடுதல் தகவலும் பிசிசிஐயின் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.