
ஐபிஎல் 2022 தொடருக்கான மினி ஏலம், வரும் 23ஆம் தேதி பகல் 2 மணியிலிருந்து நடைபெறவுள்ளது. இதற்காக மொத்தம் 991 வீரர்கள் பதிவு செய்து வைத்திருந்தார்கள். இருப்பினும், அவர்களில் 369 வீரர்களை மட்டுமே ஐபிஎல் நிர்வாகிகள் தேர்வு செய்துள்ளனர்.இதுதவிர 10 அணிகளும், தங்களுக்கு தேவையான இளம் வீரர்களை ஏலப் பட்டியலில் சேர்க்க கோரிக்கைவிட்டுள்ளது.
அந்த வகையில் 36 பேர் பேர் கூடுதலாக சேர்க்கப்பட்டு மொத்தம் 405 பேர் மினி ஏலத்தில் பங்கேற்க உள்ளனர். இதில் 273 பேர் இந்திய வீரர்களாகவும், 132 பேர் வெளிநாட்டு வீரர்களாகவும் இருக்கிறார்கள். இதில் 2 கோடி ரூபாயை அடிப்படையாகக் கொண்ட 19 வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 10 அணிகளிடமும் 206.5 கோடி ரூபாய் மீதம் இருக்கிறது. அதிகபட்சமாக சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் 42.25 கோடி ரூபாய் மீதம் இருக்கிறது. குறைந்த பட்சமாக கொல்கத்தா அணியிடம் 7.05 கோடி ரூபாய் உள்ளது.