Najam sethi
உங்கள் வீரர்களை அடுத்த ஆட்டத்திற்கு தயாராக வைத்துக் கொள்ளுங்கள் -ஹர்பஜன் சிங் எச்சரிக்கை!
கிரிக்கெட்டில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு இந்தியா-பாகிஸ்தான் அணி வீரர்கள் நல்ல நட்புடன் இருந்து வருகிறார்கள். அதே சமயத்தில் களத்திற்கு வெளியே நிலைமைகள் அவ்வளவு சுமுகமாக செல்லவில்லை. தற்போது ஆசிய கோப்பைத் தொடர் பாகிஸ்தான் இலங்கை என இரு நாடுகளில் நடந்தாலும், இரண்டாவது நாடாக இலங்கைக்கு பாகிஸ்தான் மழையின் காரணமாக விருப்பம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும் இலங்கையில் போட்டி நடக்கும் பட்சத்தில் மழை வாய்ப்பு அதிகம் இருக்கின்ற காரணத்தினால், கொழும்புவில் போட்டி வேண்டாம் என்றும், ஹம்பன்தோட்டாவில் நடத்தலாம் என்று இந்திய கிரிக்கெட் வாரிய தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அடுத்த ஒருமணி நேரத்தில் அந்த முடிவு மாற்றப்பட்டதாக, பாகிஸ்தான் கிரிக்கெட் முன்னாள் சேர்மன் நஜாம் சேத்தி குற்றம் சாட்டியதோடு, பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடி தோற்க இந்தியா பயப்படுகிறது என்று கூறியிருந்தார்.