Rahmanullah gurbaz
மைதானத்தில் நிலைதடுமாறிய குர்பாஸ்; சகா வீரர் தூக்கிச் சென்ற வைரல் காணொளி!
இன்று பிரிஸ்பேனில் உள்ள கபா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான் - ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசியது. இரு அணிகளும் கடந்த முறை ஆசிய கோப்பை போட்டியில் மோதிய போது,இரு அணிகளுக்கும் கடும் மோதல் ஏற்பட்டது.
ரசிகர்களும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதற்கு காரணம் ஆஃப்கானிஸ்தான் தான் என்று பாகிஸ்தான் வீரர்கள் குற்றஞ்சாட்டினர். இதனிடையே, இவ்விரு அணிகளும் மீண்டும் பயிற்சி ஆட்டத்தில் மோதின. இது சாதாரண போட்டியாக இருந்தாலும், கடந்த கால பகை காரணமாக, இது ஒரு முக்கிய போட்டி போல் ரசிகர்கள் கவனம் செலுத்தினர். இன்றைய ஆட்டத்தில் ஷாஹீன் ஆஃப்ரிடி எப்படி பந்துவீசப் போகிறார் என்று ரசிகர்களும் மிகுந்த ஆர்வத்துடன் காத்து கொண்டனர்.