Ravi shastri
இந்திய அணியின் தூண்டுகோலாக இவர் இருப்பார் - ரவி சாஸ்திரி!
எட்டாவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்தத் தொடரில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளன. அரையிறுதி ஆட்டங்கள் நாளை தொடங்குகின்றன.
இந்நிலையில், அரையிறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் ரிஷப் பந்த் களம் இறங்க வேண்டும் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.