Advertisement

ஷுப்மன் கில்லின் கேப்டன்சியை விமர்சித்த ரவி சாஸ்திரி!

மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில்லின் முடிவுகள் குறித்து முன்னாள் வீரரும் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement
ஷுப்மன் கில்லின் கேப்டன்சியை விமர்சித்த ரவி சாஸ்திரி!
ஷுப்மன் கில்லின் கேப்டன்சியை விமர்சித்த ரவி சாஸ்திரி! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jul 26, 2025 • 12:12 PM

Manchester Test: இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் கேப்டனாக ஷுப்மன் கில் சில தவறுகளைச் செய்துள்ளதாக  முன்னாள் வீரரும் பயிற்சியாளருமான மண்ணில் அதிக டெஸ்ட் கேட்சுகளை பிடித்த இந்திய வீரர் எனும் ராகுல் டிராவிட்டின் சாதனையை கேஎல் ராகுல் முறியடித்துள்ளார். 

Bharathi Kannan
By Bharathi Kannan
July 26, 2025 • 12:12 PM

இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. அதன்பின் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி ஜோ ரூட்டின் அபாரமான சதத்தின் மூலம் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 544 ரன்களைக் குவித்துள்ளது. 

இதில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 76 ரன்களுடனும், லிடாம் டௌசன் 21 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து 186 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து அணி நாளை நான்காம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் ஷுப்மன் கில்லின் கேப்டன்சி குறித்து முன்னாள் வீரரும் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “கடந்த ஆட்டத்தில் வாஷிங்டன் சுந்தர் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அப்படி இருந்த நிலையிலும் நீங்கள் 67 ஓவர்களுக்குப் பிறகு அவருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளீர்கள். அது அந்த வீரருக்கு என்ன சொல்கிறது? அவர், ‘நான் நான்கு விக்கெட்டுகளை எடுத்துள்ளேன், முதல் 30 முதல் 35 ஓவர்களுக்குள் நான் முன்னணியில் பந்து வீச வேண்டும், ஆனால் 67ஆவது ஓவரில் தன் நீங்கள் எனக்கு பந்துவீச வாய்ப்பு தருகிறீர்கள் என்று சிந்திப்பார். 

எனவே இது ஷுப்மன் கில்லின் மோசமான முடிவு என்று உணர்கிறேன். அதுமட்டுமில்லாமல் நேற்று முகமது சிராஜ் புதிய பந்தை எடுத்திருக்க வேண்டும் என்று நினைத்தேன். ஏனெனில் கம்போஜ் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுக வீரர். அப்படி இருக்கும் நிலையில் அவரிடம் புதிய பந்தை கொடுத்தது சரியான முடிவு என்று தோன்றவில்லை. மேலும் அது இங்கிலாந்து மீதான அழுத்தத்தைக் குறைத்தது. எனவே ஷுப்மன் கில் கேப்டனாக நிறைய தவறுகளைச் செய்துள்ளார்” என்று கூறியுள்ளார்.

இங்கிலாந்து பிளேயிங் லெவன்: ஜாக் கிரௌலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஹாரி ப்ரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித், லியாம் டௌசன், கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர்.

இந்தியா பிளேயிங் லெவன்: கேஎல் ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சாய் சுதர்ஷன், ஷுப்மன் கில்(கேப்டன்), ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர். ஜஸ்பிரித் பும்ரா, அன்ஷுல் கம்போஜ், முகமது சிராஜ்.

Also Read: LIVE Cricket Score

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement