Rishabh pant
SA vs IND: தோனியின் சாதனையை தகர்ப்பாரா ரிஷப் பந்த்?
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி 26ஆம் தேதி செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த தொடருக்கான இந்திய அணியில் நியூசிலாந்து டெஸ்ட் தொடரின்போது ஓய்வில் இருந்த விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார். தோனியின் ஓய்விற்கு பிறகு இந்திய அணியின் கீப்பராக செயல்பட்டு வரும் பந்த் மூன்று விதமான கிரிக்கெட்டிலும் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார்.