Rohit sharma cry
தோல்வியால் கண் கலங்கிய ரோஹித் சர்மா; வைரல் காணொளி!
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்திய அணியும், இங்கிலாந்து அணியும் மோதின. ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்து. அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 63 ரன்களும், விராட் கோலி 50 ரன்களும் எடுத்தனர். ரோஹித் சர்மா, கே.எல் ராகுல் ஆகியோர் வழக்கம் போல் இந்த போட்டியிலும் இந்திய அணிக்கு ஏமாற்றத்தையே கொடுத்தனர்.