Rohit sharma
டி20 உலகக்கோப்பை: இந்திய அணிக்கு கூடுதல் பயிற்சியளிக்க ராகுல் டிராவிட் முடிவு!
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டி வருகிறது. தற்போது வரை இந்திய அணி தான் அதிகபட்சமாக 6 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் உள்ளது. இந்திய அணி அடுத்ததாக ஜிம்பாப்வே அணியுடனான போட்டியில் மோதவுள்ளது. இரு அணிகளும் மோதும் இந்த போட்டி நவம்பர் 6ஆம் தேதியன்று மெல்பேர்னில் உள்ள மைதானத்தில் நடைபெறவுள்ளது.
குரூப் பி பிரிவுக்கான புள்ளிப்பட்டியலில் இந்திய அணி முதலிடத்தில் உள்ள போதும், இன்னும் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யவில்லை. பாகிஸ்தான் அணியும் அடுத்தடுத்து வெற்றிகளை பெற்று வருவதால், கடைசி லீக் போட்டியில் ஜிம்பாப்வேவுடன் வெற்றி பெற்றால் தான் நேரடியாக அரையிறுதிக்கு செல்ல முடியும்.