Shreyas iyer
கேப்டன் பதவி குறித்து நிதிஷ் ராணா ஓபன் டாக்!
கடந்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் வாங்கப்பட்டு கேப்டனாக செயலாற்றிய ஸ்ரேயாஸ் ஐயர், இந்த முறை முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயத்தால் அறுவை சிகிச்சை செய்து ஓய்வில் இருப்பதால், 2018 ஆம் ஆண்டு முதல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் நிதிஷ் ரானா கேப்டனாக நேற்று அறிவிக்கப்பட்டார்.
பேட்டிங் வரிசையில் எந்த இடத்தில் இறக்கப்பட்டாலும் அதிரடியாக விளையாடக் கூடிய இவர் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் 361 ரன்களை 144 என்ற நல்ல ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்தார். மேலும் இந்திய அணிக்காகவும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அறிமுகமாகி விளையாடியிருக்கிறார்.