இந்திய அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் பிரிஸ்பேனில் நடைபெற்ற கபா டெஸ்ட் போட்டிக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து திடீரென ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்நிலையில், அஸ்வினைப் போலவே, விரைவில் ஓய்வை அறிவிக்கக்கூடிய மூன்று இந்திய வீரர்களைப் பற்றி இப்பதிவில் பார்ப்போம்.

Advertisement

சட்டேஷ்வர் புஜாரா

Advertisement

டெஸ்ட் வடிவத்தில் இந்திய அணியின் தடுப்பு சுவராகக் கருதப்படும் மூத்த பேட்ஸ்மேன் சட்டேஷ்வர் புஜாரா இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். உண்மையில், இந்திய அணி நிர்வாகம் புஜாராவை முற்றிலும் புறக்கணிக்கத் தொடங்கியுள்ளது. இந்தியாவுக்காக 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய புஜாரா 2023 ஆம் ஆண்டு ஓவல் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது கடைசி டெஸ்டில் போட்டியில் விளையாடினார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அஸ்வினைப் போலவே அவரும் விரைவில் ஓய்வை அறிவிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புஜாரா டெஸ்ட் வடிவத்தில் சுமார் 43 சராசரியில் 7,195 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர 5 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

அஜிங்கியா ரஹானே

புஜாராவுடன் இணைந்த மற்றொரு அனுபவ வீரர் அஜிங்கியா ரஹானேவும் விரைவில் சர்வதேச கிரிக்கெட்டுக்கு விடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஹானே உள்நாட்டுப் போட்டிகளில் தொடர்ந்து ரன்களை குவித்து வருகிறார். இருந்தபோதிலும், அவருக்கு சர்வதேச கிரிக்கெட்டின் கதவுகள் திறக்கப்படுவதாகத் தெரியவில்லை. ரஹானே தலைமையில், 2020-21 ஆம் ஆண்டில் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரை வென்று சாதனைப் படைத்தது. இது தவிர, ரஹானே 85 டெஸ்டில் 144 இன்னிங்ஸ்களில் 5,077 ரன்கள் எடுத்துள்ளார். இதுதவிர்த்து அவர் இந்திய அணிக்காக 90 ஒருநாள் போட்டிகளிலும், 20 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரோஹித் சர்மா

Advertisement

இந்த பட்டியலில் இந்திய கேப்டன் ரோகித் சர்மாவும் இடம்பிடித்துள்ளார். இதற்கு முக்கிய காரணம் அவரது தற்போதைய ஃபார்ம் தான். மேலும் தற்சமயம் 37 வயதான ரோஹித் சர்மா தனது டெஸ்ட் வாழ்க்கையின் மோசமான கட்டத்தை கடந்து வருகிறார். அதிலும் கடந்த 13 இன்னிங்ஸ்களில் ஒரே ஒரு அரைசதம் மட்டுமே அடித்துள்ளார். இதுதவிர தற்சமயம் நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரிலும் அவரது ஃபார்ம் மிக மோசமாக இருந்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், தன்னை மேம்படுத்திக் கொள்ள முடியாவிட்டால் அஸ்வினைப் போல், விரைவில் அவரும் டெஸ்ட் ஓய்வை அறிவிக்கலாம் என்பது தெளிவாகிறது. ஏற்கனவே டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள ரோஹித் சர்மா, இனி ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் அவர் கவனம் செலுத்த வாய்ப்புள்ளது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News