இந்தியாவில் இந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஐசிசி-யின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெறவுள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டிற்கு பிறகு முற்றிலும் இந்தியாவில் இம்முறை 50 உலகக்கோப்பை நடைபெற இருப்பதினால் இம்முறை இந்திய அணி மீண்டும் கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற வேண்டும் என்பதே ரசிகர்கள் அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

Advertisement

இந்திய அணியும் இந்த தொடருக்காக தற்போது தங்களது அணி வீரர்களை தயார் செய்து அணியை பலப்படுத்தி வருகிறது. இன்னும் ஒரு சில வாரங்களில் உலக கோப்பை தொடருக்கான அணிகளை அறிவிக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கையில் இந்த உலகக் கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் எந்தெந்த வீரர்களுக்கு இடம் கிடைக்கும்? என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

Advertisement

அந்த வகையில் எதிர்வரும் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் எந்தெந்த வீரர்களுக்கு இடம் கிடைக்கும்? என்று முன்னாள் வீரர்கள் பலரும் பேசி வரும் வேளையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா இந்த ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கும் ஆனாலும் அவர் விளையாடும் பிளேயிங் லெவனில் இடம்பெற வாய்ப்பு இல்லை என்று கூறியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர், “இந்திய அணியில் தற்போது உள்ள பேட்டிங் வரிசைப்படி இடது கை பேட்ஸ்மேனாக நான்காவது இடத்தில் இஷான் கிஷனை தான் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இடம்பெற வைத்து விளையாட வைக்க முடியும். ஏனெனில் இந்திய அணியின் மிடில் ஆர்டரில் ஒரு இடதுகை பேட்ஸ்மேன் வேண்டும் என்ற நிலையில் ரிஷப் பந்தின் இடத்தை அவரே பூர்த்தி செய்வார்.

இதனால் அவரை வைத்தே இந்திய அணி உலக கோப்பை தொடரில் விளையாட வாய்ப்பு உள்ளது. இந்த விடயத்தில் சஞ்சு சாம்சன் பற்றிய கேள்வி உங்கள் மனதில் இருக்கலாம். ஆனால் சஞ்சு சாம்சன் என்னை பொறுத்தவரை நான்காவது இடத்தில் விளையாட மாட்டார் என்பது வருத்தமான உண்மை.

இந்த உலகக் கோப்பை தொடரில் அவருக்கு இடம் கிடைத்தாலும் விளையாடும் பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்காது என்றே நினைக்கிறேன்.  அதே போன்று இந்திய அணி இந்த உலகக் கோப்பை தொடரில் டாஸ் வென்றாலும் முதலில் பேட்டிங் செய்யும் அளவிற்கு அணியின் வீரர்களை பலப்படுத்த வேண்டும்” என தெரிவித்துள்ளார். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News