இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி 6ஆவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. அஹ்மதாபாத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பேட்டிங்கில் வெறும் 240 ரன்கள் மட்டுமே எடுத்த இந்தியா தோல்வியை சந்தித்து 2011 போல சொந்த மண்ணில் கோப்பையை வெல்லும் பொன்னான வாய்ப்பை கோட்டை விட்டது.

Advertisement

இந்நிலையில் 10 தொடர்ச்சியான வெற்றிகளை பெற்றதால் இறுதிப்போட்டிக்கு முன்பே இந்தியாவை சாம்பியன் அணியாக கொண்டாடிய ரசிகர்கள் மற்றும் இந்திய ஊடகங்கள் தான் இந்த தோல்விக்கு காரணம் என்று வாசிம் அக்ரம் விமர்சித்துள்ளார். மேலும் இறுதிப்போட்டியில் மிடில் ஓவர்களில் சுமாராக விளையாடிய இந்தியா தங்களுடைய தவறை ஒப்புக்கொண்டு 2024 டி20 உலகக் கோப்பை பயணத்தை தொடங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுகுறித்து பேசிய அவர், “இந்த தோல்வியிலிருந்து இந்திய நாடு வெளிவருவது கடினம் என்பதை நான் புரிந்து கொள்வேன். ஏனெனில் உங்களுடைய அணி சிறப்பாக விளையாடி 10 தொடர்ச்சியான வெற்றிகளை பெற்றது. ஆனால் தொலைக்காட்சி, சமூக வலைதளங்கள் மற்றும் ரசிகர்கள் ஆகியோர் இறுதிப்போட்டி நடைபெறுவதற்கு முன்பாகவே இந்தியாவை உலக சாம்பியனாக மாற்றினார்கள். இந்த தவறை நீங்கள் ஒப்புக் கொள்ளுங்கள். இப்படி சொல்வதற்கு மன்னிக்கவும்

அதே சமயம் உங்களுடைய அணி சிறப்பாக விளையாடியதால் நம்பிக்கையும் அதிகரித்தது. எனவே மொத்த தவறும் உங்களுடையது கிடையாது. ஒரு மோசமான போட்டியால் அனைத்தும் நழுவி சென்றது. அதற்கான பாராட்டுகளை ஆஸ்திரேலியாவுக்கு கொடுக்க வேண்டும். ஆனால் 11 – 40 வரையிலான மிடில் ஓவர்களில் இந்தியா சில பவுண்டரிகள் மட்டுமே அடித்தனர். சூரியகுமாருக்கு எதிராக ஆஸ்திரேலிய பவுலர்கள் ஒரு வேகமான பந்தை கூட வீசாமல் சரியான ஃபீல்டர்களை நிறுத்தி திட்டத்துடன் செயல்பட்டார்கள்.

ஆனாலும் தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய இந்தியா ஃபைனலில் தோற்றது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. 1999 கோப்பை ஃபைனலில் நாங்கள் தோற்றதை பற்றி இப்போதும் என்னிடம் கேட்கிறார்கள். குறிப்பாக டாஸ் வென்று ஏன் பேட்டிங் செய்யவில்லை என்று என்னிடம் கேட்கிறார்கள். எனவே சமூக வலைதளங்களில் நிலவும் கருத்துக்களை கணக்கில் எடுத்துக் கொள்ளாதீர்கள். இந்தியா அடுத்ததாக 6 மாதத்தில் நடைபெறும் டி20 உலகக்கோப்பையை நோக்கி நகர வேண்டும்” என்று கூறியுள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News