இந்தியாவின் பாரம்பரிய மிக்க உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரானது இன்று தொடங்கியது. இதில் இன்று நடைபெற்ற குரூப் சி அணிகளுக்கு இடையேயான முதல் சுற்று ஆட்டத்தில் அருணாச்சல பிரதேசம் மற்றும் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த அருணாச்சல பிரதேச அணி 48.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 164 ரன்களில் ஆல் அவுட்டானது. 

Advertisement

அந்த அணியில் அதிகபட்சமாக தேச்சி நெரி 42 ரன்களையும், ஹர்திக் வர்மா 38 ரன்களையும் சேர்த்தனர். பஞ்சாப் தரப்பில் அஸ்வினி குமார், மயங்க் மார்கண்டே தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணியானது அன்மோல்ப்ரீத் சிங்கின் அதிரடியான சதத்தின் மூலம் 12.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 9 விக்கெட் வித்தியாசத்தில் அருணாச்சல பிரதேச அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

Advertisement

இந்நிலையில் இப்போட்டியில் பஞ்சாப் அணிக்காக விளையாடிய அன்மோல்பிரீத் சிங் 35 பந்துகளில் தனது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் இந்தியாவுக்காக முதல்தர கிரிக்கெட் போட்டியில் அதிவேக சதமடித்த வீரர் எனும் சாதனையை படைத்தார். முன்னதாக இந்த பட்டியலில் முன்னாள் ஆல்ரவுண்டர் யூசுப் பதான் 2009-10 விஜய் ஹசாரே  கோப்பை தொடரில் மகாராஷ்டிராவுக்கு எதிரான போட்டியில் 40 பந்துகளில் சதம் அடித்ததேச சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதுதவிர்த்து உலகளவில் முதல்தர கிரிக்கெட்டில் அதிவேக சதமடித்த வீரராக ஆஸ்திரேலிய அணியின் ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் உள்ளார். அவர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உள்ளூர் போட்டி ஒன்றில் 29 பந்துகளில் சதமடித்து அசத்தினார். அவருக்கு அடுத்து தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் ஜாம்பவான் ஏபிடி வில்லியர்ஸ் 31 பந்துகளில் சதமடித்து இரண்டம் இடத்தில் உள்ள நிலையில், அவர்கள் வரிசையில் அன்மோல்பிரீத் சிங் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார்.

முன்னதாக நடந்து முடிந்த ஐபிஎல் 18ஆவது சீசனுக்கான வீரர்கள் ஏலத்தில் ரூ.30 லட்சம் அடிப்படை விலையாக அன்மோல்ப்ரீத் சிங் நிர்ணயித்தார். இருப்பினும் இந்த ஐபிஎல் 2025 இன் மெகா ஏலத்தில் அவரை எந்த அணியும் வாங்க ஆர்வம் காட்டவில்லை. இதனால் அவர் ஏலத்திற்கு விற்கபடாத வீரராக ஊள்ளார். முன்னதாக அவர் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளில் ஒரு அங்கமாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News