ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த பாகிஸ்தான் அணி ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது இன்றுடன் முடிவடைந்தது. இதில் ஆஸ்திரேலிய அணி ஏற்கெனவே 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றிய நிலையில், இரு அணிகளுக்கும் இடியேயான மூன்றாவது போட்டி இன்று நடைபெற்றது.

Advertisement

அதன்படி இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியில் பாபர் ஆசாமை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் பாகிஸ்தான் அணி 18.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்களைச மட்டுமே எடுத்தது. இதில் அதிகபட்சமாக பாபர் ஆசாம் 41 ரன்களைச் சேர்த்தார். ஆஸ்திரேலியா தரப்பில் ஆரோன் ஹார்டி 3 விக்கெட் வீழ்த்தினார்.

Advertisement

பின்னர் 118 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் மேத்யூ ஷார்ட், ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும், அடுத்து களமிறங்கிய கேப்டன் ஜோஸ் இங்கிலிஸ் 27 ரன்களையும், ஆதிரடியாக விளையாடிய மார்கஸ் ஸ்டொய்னிஸ் 27 பந்துகளில் 61 ரன்களைக் குவித்ததன் மூலம் ஆஸ்திரேலிய அணி 11.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 3 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. 

இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தியதுடன் பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்தும் அசத்தியது. மேலும் இப்போட்டியில் அதிரடியாக விளையாடி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வாகித்த மார்கஸ் ஸ்டொய்னிஸ் ஆட்டநாயகன் விருதையும், தொடரில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஸ்பென்சர் ஜான்சன் தொடர் நாயகன் விருதையும் வென்றனர்.

இந்நிலையில், இப்போட்டியில் 41 ரன்கள் அடித்ததன் மூலம் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் அசாம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் விராட் கோலியை பின்னுக்குத் தள்ளி 2ஆம் இடத்தை பிடித்துள்ளார். முன்னதாக சமீபத்தியில் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 117 இன்னிங்ஸ்களில் 4188 ரன்களை குவித்து இரண்டாம் இடத்தில் இருந்தார்.

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

தற்சமயம் பாபர் ஆசாம் 119 இன்னிங்ஸில் 4192 ரன்களை குவித்து விராட் கோலியை பின்னுக்கு தள்ளியதுடன் இரண்டாம் இடத்திற்கும் முன்னேறி அசத்தியுள்ளார். அதேசமயம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை அடித்த வீரர்கள் பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா 151 இன்னிங்ஸ்களில் 4231 ரன்களைச் சேர்த்து முதலிடத்தில் நீடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News