பாகிஸ்தான் அணி தற்சமயம் அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலிரண்டு டி20 போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்று 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்திருந்தன. இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்று கடைசி டி20 போட்டி நேற்று டப்ளினில் நடைபெற்றது.

Advertisement

இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் லோர்கன் டக்கர் 73 ரன்களையும், ஆண்ட்ரூ பால்பிர்னி 35 ரன்களையும், ஹாரி டெக்டர் 30 ரன்களையும் சேர்த்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் ஷாஹீன் அஃப்ரிடி 3 விக்கெட்டுகளையும், அப்பாஸ் அஃப்ரிடி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

Advertisement

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணியானது பாபர் ஆசாம் - முகமது ரிஸ்வான் ஆகியோரது அரைசதத்தின் மூலம் 17 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தி 2-1 என்ற கணக்கில் டி20 தொடரைக் கைப்பற்றி அசத்தியது. இப்போட்டியில் சிறப்பாக பந்துவீசி அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த ஷாஹீன் அஃப்ரிடி ஆட்டநாயகன் விருதை வென்றார். 

இந்நிலையில் இப்போட்டியில் அரைசதம் கடந்ததன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி கேப்டன் புதிய சாதனை படைத்துள்ளார். அதன்படி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக அரைசதங்கள் அடித்த வீரர் எனும் சாதனையைப் படைத்துள்ளார். முன்னதாக இந்திய வீரர் விராட் கோலி 38 அரைசதங்களை அடித்து முதலிடத்தில் இருந்த நிலையில், தற்போது பாபர் அசாம் 39 அரைசதங்களை விளாசி முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார்.

சர்வதேசா டி20 கிரிக்கெட்டில் அதிக அரைசதங்கள்

  • பாபர் ஆசாம் (பாகிஸ்தான்) - 39
  • விராட் கோலி (இந்தியா) - 38
  • ரோஹித் சர்மா (இந்தியா) - 34

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News