ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பையை 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்ற இந்திய அணி நடப்பு சாம்பியன் என்ற முறையில் கோப்பையை கைப்பற்றியது. இந்த நிலையில் இந்திய அணி வீரர்களுக்கு கவுதம் கம்பீர் ஒரு எச்சரிக்கை கொடுத்துள்ளார். தொடரை வென்று விட்டோம் என்று அலட்சியம் காட்டாமல் பணியை சரியாக முடியுங்கள் என்று அவர் கூறியுள்ளார்.

Advertisement

இது குறித்து பேசிய அவர், “ ராகுல் டிராவிட், வி வி எஸ் லட்சுமணன் செய்ததை எப்போதும் நினைவு வைத்துக் கொள்ளுங்கள். 2001 ஆம் ஆண்டு இந்திய அணி தோல்வியின் விளிம்பில் இருந்தது. இந்தியா வெற்றி பெற வாய்ப்பு இல்லாத நிலையில், லக்ஷ்மன் மற்றும் ராகுல் டிராவிட் ஜோடி 376 ரன்கள் சேர்த்தார்கள். இதில் லக்ஷ்மன் மட்டும் 280 ரன்களை குவித்தார். டிராவிட் தனியாக 150 ரன்கள் அடித்தார். இந்திய அணி பாலோ ஆன் பெற்று இவ்வளோ பெரிய ஸ்கோரை சேர்த்தார்கள். இதன் மூலம் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரையும் கைப்பற்றியது. இது போன்ற சம்பவங்கள் எல்லாம் நடந்திருக்கிறது.

Advertisement

ஆஸ்திரேலியா அணியிடம் யுத்திகள் ரீதியாக பல பிரச்சினைகள் இருக்கிறது. எனினும் இந்த விஷயங்களை எல்லாம் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். தற்போது இந்திய அணி நான்குக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றுமா என்று என்னால் யூகிக்க முடியாது. ஏனெனில் ஆஸ்திரேலிய அணியில் திறமை வாய்ந்த வீரர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களை நம்பி ஆஸ்திரேலிய அணி இருக்கிறது.

என்னை பொருத்தவரையில் ஒரு தொடருக்கு நடுவில் பேட்ஸ்மேன்களில் தவறை நாம் திருத்தி அவர்களுக்கு புதியதாக எதையும் சொல்லிக் கொடுக்க முடியாது. பேட்ஸ்மேன்களின் பேட்டிங் யுத்தியை நீங்கள் தொடருக்கு நடுவே மாற்ற நினைத்தால், நீங்கள் அடித்த 260 ரன்கள் அல்லது 120 ரன்கள் கூட உங்களுக்கு கிடைக்காமல் போய்விடும். இப்போதுள்ள சூழ்நிலையில், தனிப்பட்ட வீரர்கள் நினைத்தால் மட்டுமே ஆஸ்திரேலியா காப்பாற்ற முடியும். ஒரு அணியாக இனி ஏதும் செய்ய முடியாது.

ஆஸ்திரேலிய அணியில் பல வீரர்களுக்கு தங்கள் மீது தற்போது சந்தேகம் வந்திருக்கும். அதிலிருந்து மீண்டு வந்து விளையாடுவது மிகவும் கடினம். ஆனால் உஸ்மான் கவஜாவோ இல்லை ஸ்மித்தோ இரட்டை சதம் அல்லது 150 ரன்கள் அடித்துவிட்டால், ஆஸ்திரேலிய அணி இந்த தொடரில் மீண்டு எழுந்து விட அதிக வாய்ப்பு இருக்கிறது. இதனால் இந்திய அணி வீரர்கள் கவனத்துடன் அலட்சியம் இல்லாமல் இருக்க வேண்டும். எனினும் இதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு தான்” என்று கம்பீர் கூறியுள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News