பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று அசத்தியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று முடிந்தது. 

Advertisement

இப்போட்டியில் இந்திய அணி ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், சர்ஃப்ராஸ் கான் ஆகியோரது அபாரமான பேட்டிங்கின் மூலம், ரவீந்திர ஜடேஜாவின் ஆல் ரவுண்டர் ஆட்டத்தின் மூலமாகவும் 434 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியதுடன், 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரிலும் முன்னிலைப் பெற்று அசத்தியுள்ளது. இதன் காரணமாக இந்திய அணி இத்தொடரை வெல்லும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. 

Advertisement

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் வரும் பிப்ரவரி 23ஆம் தேதி நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் இன்றைய தினம் ராஞ்சி செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இப்போட்டிக்கான இந்திய அணியிலிருந்து நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு ஓய்வு வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடைபெற்றுவரும் இந்த டெஸ்ட் தொடரின் மூன்று போட்டிகளிலும் அபாரமாக செயல்பட்ட ஜஸ்ப்ரித் பும்ரா 17 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். இந்நிலையில் தொடர்ந்து விளையாடிவரும் பும்ராவின் பணிச்சுமையை குறைக்கும் விதமாக அவருக்கு இந்த ஓய்வு வழங்கப்படவுள்ளதாக தெரிகிறது. மேலும் நான்காவது போட்டியின் முடிவை பொறுத்து 5ஆவது போட்டியிலும் அவருக்கு ஓய்வு வழங்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. 

முன்னதாக மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில் அவர் அப்போட்டி விளையாடினார். இதனால் இப்போட்டியிலும் அவருக்கு ஓய்வு வழங்கப்படுமா என்பது சந்தேகம் தான. அதேசமயம் பும்ராவுக்கு ஓய்வு வழங்கப்படும் பட்சத்தில் மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமாருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News