ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நாளை துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Advertisement

இதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது வங்கதேசத்திற்கு எதிரான வெற்றிபெற்ற உத்வேகத்துடன் இப்போட்டியை எதிர்கொள்கிறது. மேலும் இப்போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் அரையிறுதிச்சுற்றுக்கான வாய்ப்பையும் உறுதிசெய்யும். அதேசமயம் முகமது ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் அணி நியூசிலாந்துக்கு எதிராக படுதோல்வியைச் சந்தித்த கையோடு இப்போட்டியை எதிர்கொள்கிறது. 

Advertisement

அதனால் அந்த அணி அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றிபெற்றால் மட்டுமே அரையிறுதி சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதால் நிச்சயம் வெற்றிக்காக கடுமையாக போராடும். இதனால் இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டிக்கான இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவனை இப்பதிவில் பார்ப்போம். 

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்தியா vs பாகிஸ்தான் 

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையாக இருந்தாலும் சரி, டி20 உலகக் கோப்பையாக இருந்தாலும் சரி, இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தியுள்ளது. ஆனால் சாம்பியன்ஸ் கோப்பை தொடரை பொறுத்தவரையில் இரு அணிகளுக்கும் இடையே மொத்தம் 5 போட்டிகள் நடந்துள்ள நிலையில், அதில் பாகிஸ்தான் 3 போட்டிகளிலும், இந்தியா 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. கடந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதி போட்டியில்ம் கூட பாகிஸ்தான் அணி இந்தியாவை வீழ்த்தி சாம்பியனானது குறிப்பிடத்தக்கது. 

இரு அணிகளின் உத்தேச லெவன்

Advertisement

பாகிஸ்தான்: இமாம் உல் ஹக், பாபர் அசாம், சவுத் ஷகீல், முகமது ரிஸ்வான் (கேப்டன்), சல்மான் ஆகா, தையாப் தாஹிர், குஷ்தில் ஷா, ஷாஹீன் அஃப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவூஃப், அப்ரார் அகமது.

இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், முகமது ஷமி, ஹர்ஷித் ராணா.

வீரர்களின் தனிப்பட்ட சாதனை

Advertisement

இப்போட்டியில் விராட் கோலி 15 ரன்கள் எடுத்தால், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 14,000 ரன்களைக் கடந்த இரண்டாவது இந்திய கிரிக்கெட் வீரர் மற்றும் உலகின் மூன்றாவது கிரிக்கெட் வீரர் என்ற பெருமையைப் பெறுவார். மேலும் இந்த மைல் கல்லை அதிவேகமாக எட்டிய வீரர் எனும் சாதனையையும் அவர் படைக்கும் வாய்ப்பு உள்ளது. தற்போது சச்சின் டெண்டுல்கர் மற்றும் குமார் சங்கக்கார மட்டுமே இந்த எண்ணிக்கையை எட்டியுள்ளனர்.

அதேசமயம் இப்போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் கேஎல் ராகுல் 56 ரன்களைச் சேர்க்கும் பட்சத்தில் தனது 3000 ரன்களை பூர்த்தி செய்வார். இதனை அவர் பூர்த்தி செய்யும் பட்சத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 3000 ரன்களைக் குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் ஷிகர் தவான் மற்றும் விராட் கோலி ஆகியோரின் சாதனையை சமன்செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News