நேற்று ஐசிசியின் ஒருநாள் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் அமர்க்களமாக தொடங்கி இருக்கிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து நியூசிலாந்து அணிகள் மோதிக்கொண்டன. உலகக் கோப்பைக்கு நல்ல எதிர்பார்ப்பை உண்டாக்கும் விதமாக, முதல் போட்டியில் பலமான இங்கிலாந்து அணியை மிக எளிதாக ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வென்றது சிறப்பான ஒன்றாக அமைந்திருக்கிறது.

Advertisement

இந்த நிலையில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை ஐந்து முறை வென்ற ஆஸ்திரேலிய அணியை சென்னை சேப்பாக்கத்தில் அக்டோபர் 8ஆம் தேதி எதிர்கொள்கிறது. நடப்பு உலகக் கோப்பை பயணம் இந்திய அணிக்கு தமிழகத்தில் இருந்து துவங்குகிறது. இதற்கு முன்பாக இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தற்சமயம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடி இருந்தது.

Advertisement

மேலும் இந்த வருட ஐபிஎல் தொடருக்கு முன்பு இந்திய அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்பாராத அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்சமயம் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் மிகச் சிறந்த ஃபார்மில் இருந்து வருகிறார்கள். 

குறிப்பாக இளம் வீரர் ஷுப்மன் கில் இந்த வருடம் முழுவதும் ஒருநாள் கிரிக்கெட்டில் அபாரமாக செயல்பட்டு வந்திருக்கிறார்.  இதுவரை 35 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள கில், 1,917 ரன்களை விளாசி இருக்கிறார். அதேபோல் மொத்தமாக 6 சதங்கள் மற்றும் 9 அரைசதங்களை விளாசி சாதனை படைத்துள்ளார். அதில் நடப்பாண்டில் நியூசிலாந்து அணிக்கு எதிரான இரட்டை சதம் உட்பட 5 சதங்களை விளாசியுள்ளார். 

அதேபோல் நடந்து முடிந்த ஆசிய கோப்பை தொடரில் 302 ரன்களை விளாசினார். இதனால் உலகக்கோப்பை தொடரில் மிகமுக்கிய வீரராக சுப்மன் கில் பார்க்கப்பட்டார். உலகக்கோப்பை தொடர் நேற்று தொடங்கிய நிலையில், இந்திய அணி தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து நாளை மறுநாள் களமிறங்கவுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ள இந்தப் போட்டியில் விளையாடுவதற்காக நேற்று முன்தினமே இந்திய வீரர்கள் சென்னை வந்தனர்.

சென்னையில் களமிறங்கிய முதல் நாளிலேயே இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். அதிலும் நட்சத்திர வீரர் விராட் கோலி 45 நிமிடங்கள் கூடுதல் பயிற்சியில் ஈடுபட்டார். ஆனால் தொடக்க வீரர் ஷுப்மன் கில் இந்திய அணியின் பயிற்சியில் ஈடுபடவில்லை. நேற்றும் ஷுப்மன் கில் வலைப் பயிற்சியில் ஈடுபடவில்லை. வழக்கமாக பயிற்சியை மிஸ் செய்யாத வீரர் சுப்மன் கில் தான் என்று ரோகித் சர்மா அண்மையில் கூறியிருந்தார்.

Advertisement

இதனால் ஷுப்மன் கில் பயிற்சியை தவறவிட்டது சந்தேகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்திய நட்சத்திர வீரர் ஷுப்மன் கில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. மருத்துவ பரிசோதனையிலும் ஷுப்மன் கில்லுக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவர் ஓய்வில் இருக்கிறார்.

இதனால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் ஷுப்மன் கில் பங்கேற்பாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் இந்திய அணி நிர்வாகம் அவரது உடல்நிலையை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், அவர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் விளையாடமாட்டர் என்று 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News