விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை தொடரில் இன்று டெல்லியில் நடைபெற்ற 9ஆவது லீக் போட்டியில் இந்தியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதின. அப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு பும்ரா வேகத்தில் ஆரம்பத்திலேயே இப்ராஹிம் ஸத்ரான் 2 ரன்களில் ஆட்டமிழந்தார்.

Advertisement

அடுத்த சில ஓவர்களிலேயே மறுபுறம் தடுமாறிய ரஹ்மனுல்லா குர்பாஸ் 21 ரன்களில் பாண்டியா வேகத்தில் அவுட்டாக 3ஆவது களமிறங்கி நிதானமாக விளையாட முயற்சித்த ரஹ்மத் ஷா 16 ரன்களில் அவுட்டானார். அதனால் 63/3 என ஆரம்பத்திலேயே தடுமாறிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு அடுத்ததாக ஜோடி சேர்ந்த கேப்டன் ஷாஹிதி மற்றும் ஒமர்சாய் ஆகியோர் நிதானமாக விளையாடி சரிவை சரி செய்ய முயற்சித்தனர்.

Advertisement

அந்த வகையில் மிடில் ஓவர்களில் நங்கூரமாக நின்று 35 ஓவர்கள் வரை சிறப்பாக பேட்டிங் செய்த இந்த ஜோடி 4ஆவது விக்கெட்டுக்கு 121 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆஃப்கானிஸ்தானை மீட்டெடுத்த போது ஓமர்சாய் 2 பவுண்டரை 4 சிக்சருடன் 62 ரன்களில் பாண்டியா வேகத்தில் ஆட்டமிழந்தார். ஆனாலும் மறுபுறம் தொடர்ந்து அசத்தலாக பேட்டிங் செய்த கேப்டன் ஷாஹிதி 43 ஓவர்கள் வரை சிறப்பாக விளையாடி 8 பவுண்டரி 1 சிக்ஸருடன் 80 ரன்கள் எடுத்திருந்த போது சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் குல்தீப் யாதவ் சுழலில் சிக்கினார்.

ஆனால் அடுத்ததாக வந்த நஜிபுல்லா ஸத்ரான் 2 ரன்களில் அவுட்டாக்கிய பும்ரா மறுபுறம் ஃபினிஷிங் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட முகமது நபியையும் 19 ரன்களில் அவுட்டாக்கினார். அத்துடன் கடைசி நேரத்தில் கண்மூடித்தனமாக அடிக்கக்கூடிய ரஷித் கானையும் 16 ரன்களில் அவுட்டாக்கி பெவிலியன் அனுப்பி வைத்த அவர் 2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை எடுத்து ஆஃப்கானிஸ்தானை அதிரடியாக விளையாட விடாமல் தடுத்து நிறுத்தினார்.

அப்போது பேட்டிங் செய்வதற்காக நவீன்-உல்-ஹக் வந்த போது டெல்லி ரசிகர்கள் மொத்தமாக சேர்ந்து கோலி கோலி என்று கூச்சலிட்டு மொத்த மைதானத்தையும் தெறிக்க விட்டார்கள் என்றே சொல்லலாம். அதாவது கடந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக விளையாடிய அவர் இந்தியாவின் ஜாம்பவானாக போற்றப்படும் விராட் கோலியிடம் சண்டையில் ஈடுபட்டு இன்ஸ்டாகிராமில் கலாய்த்தது யாராலும் மறக்க முடியாது.

 

Advertisement

அதற்கு ஏற்கனவே ரசிகர்கள் தொடர்ந்து பதிலடி கொடுத்து வரும் நிலையில் விராட் கோலியின் சொந்த ஊரான டெல்லி கோட்டையில் தற்போது மற்றுமொரு பதிலடி கொடுத்து மாஸ் காட்டினர். இறுதியில் நவீன் 9 ரன்களும், முஜீப் 10 ரன்களும் எடுத்த போதிலும் 50 ஓவர்களில் ஆஃப்கானிஸ்தான்  அணி 8 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்களை எடுத்தது. இந்நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக பும்ரா 4 விக்கெட்களை சாய்த்தார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News