Advertisement
Advertisement
Advertisement
Advertisement

Naveen ul haq

எனது செயலால் ரசிகர்களுக்கு வேண்டிய மசாலா கிடைக்காமல் போயிருக்கும் - விராட் கோலி!
Image Source: Google

எனது செயலால் ரசிகர்களுக்கு வேண்டிய மசாலா கிடைக்காமல் போயிருக்கும் - விராட் கோலி!

By Bharathi Kannan April 11, 2024 • 20:45 PM View: 61

ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் இத்தொடரில் நடைபெற்ற ஆர்சிபி மற்றும் கேகேஆர் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியின் போது ஆர்சிபி வீரர் விராட் கோலியை, கேகேஆர் அணியின் ஆலோசகர் கௌதம் கம்பீர் கட்டியணைத்து சில வார்த்தைகளை கூறிச்சென்றார். இக்காணொளியானது இணையாத்தில் வைரலாகியது. 

ஏனெனில் கடந்த சில ஆண்டுகளாக கௌதம் கம்பீர் மற்றும் விராட் கோலி இருவரும் கிரிக்கெட் களத்தில் மோதுவதை வழக்கமாக வைத்திருந்தனர். அதிலும் குறிப்பாக கடந்த ஐபிஎல் சீசனின் போது லக்னோ அணியின் ஆலோசகராக செயல்பட்ட கௌதம் கம்பீர் - விராட் கோலி இருவருக்கும் இடையிலான மோதலானது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனால் இந்த சீசனிலும் இவர்கள் களத்தில் ஆக்ரோஷமாக செயல்பட்டு பிரச்சனையில் ஈடுபடுவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

Related Cricket News on Naveen ul haq