இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் வென்றால் மட்டும்தான், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும் என்ற நிலை இருந்தது. இந்நிலையில், நாக்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றியைப் பெற்று அசத்தியது. 

Advertisement

இதனைத் தொடர்ந்து டெல்லியில் துவங்கி நடைபெற்ற இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றது. இதன்மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி கிட்டதட்ட தகுதிபெற்றுவிட்டது.

Advertisement

இந்திய அணி இப்பொட்டியில் வெற்றியைப் பெற்றதன் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் 64.06% புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலிய அணி 66.67% புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. இலங்கை 53.3% புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. தென் ஆப்பிரிக்க அணிக்கு வாய்ப்பு முடிந்துவிட்டது. இங்கிலாந்து அணிக்கும் வாய்ப்பு மிகிமிக மிக குறைவு.

ஆஸ்திரேலிய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற வேண்டும் என்றால், எஞ்சிய இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஒன்றை டிரா செய்தாலே போதும். ஆனால், அதற்கு வாய்ப்பு மிகமிக குறைவாக இருக்கிறது. ஒருவேளை கடைசி இரண்டு டெஸ்ட்களில் ஆஸ்திரேலிய அணி டிரா கூட செய்யவில்லை என்றால், அடுத்து நியூசிலாந்து, இலங்கை இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முடிவுக்காக ஆஸ்திரேலிய அணி காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும்.

இந்த இலங்கை, நியூசிலாந்து இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒருவேளை இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் வென்றால், இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி விடும். அதுவும், இந்திய அணி ஆஸ்திரேலியாவை 4-0 என்ற கணக்கில் வீழ்த்தினால்தான் இது சாத்தியம். இந்திய அணி அப்படி செய்ய வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.

நியூசிலாந்து மண்ணில் சமீபத்தில் வங்கதேச அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி முதல் போட்டியில் அபார வெற்றியைப் பெற்றிருந்தது. தற்போது இலங்கை அணியும் ஃபார்மில் இருப்பதால், நியூசிலாந்து மண்ணில் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வெல்ல வாய்ப்புகள் இருக்கிறது.

Advertisement

ஒருவேளை, இலங்கை அணி இந்த இரண்டு டெஸ்ட்களில் ஒன்றில் டிரா செய்தால் கூட, ஆஸ்திரேலிய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிடும். இதனால், இலங்கை, நியூசிலாந்து இடையிலான இரண்டு டெஸ்ட் போட்டிகள் தற்போது கவனத்தை பெற்றுள்ளது. இந்த டெஸ்ட் தொடர் அடுத்த மாதம்  நடைபெறவுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி ஜூன் முதல் வாரத்தில் இங்கிலாந்து லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கி நடைபெறவுள்ளது. இங்கு இருக்க கூடிய பிட்ச் வேகத்திற்கு சாதகமானது என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News