ENG vs IND, 4th test Day 1: 191 ரன்னில் சுருந்த இந்தியா; விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இங்கிலாந்து!

Updated: Thu, Sep 02 2021 23:13 IST
Image Source: Google

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 4வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்துவருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியது.

இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித்(11), ராகுல்(17) ஆகிய இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் புஜாரா(4), ஜடேஜா(10) ஆகிய இருவரும் சொதப்பினர். சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த கேப்டன் கோலி, 50 ரன்னில் நடையை கட்ட, அவரைத்தொடர்ந்து ரஹானே 14 ரன்னிலும் ரிஷப் பண்ட் 9 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 

பின்வரிசையில் இறங்கிய ஷர்துல் தாகூர் அடித்து ஆடி 31 பந்தில் அரைசதம் அடித்தார். அதிரடியாக ஆடிய ஷர்துல் தாகூர் 36 பந்தில் 57 ரன்களை விளாசி ஆட்டமிழக்க, அதன்பின்னர் டெயிலெண்டர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 191 ரன்களுக்கு சுருண்டது.

இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணியில் ரோரி பர்ன்ஸ் 5 ரன்னிலும், ஹசீப் ஹமீத் ரன் ஏதுமின்றியும் அடுத்தடுத்து பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அதைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த டேவிட் மாலன் - ஜோ ரூட் இணை நிதான் ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இத்தொடரில் தொடர்ந்து மூன்று போட்டிகளிலும் சதம் விளாசி அசத்திய ஜோ ரூட் 21 ரன்கள் எடுத்திருந்த நிலையில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் போல்டாகினார். 

இதனால் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 53 ரன்களை எடுத்தது. இங்கிலாந்து அணி தரப்பில் டேவிட் மாலன் 26 ரன்களுடனும், கிரேக் ஓவர்டன் ஒரு ரன்னுடனும் களத்தில் உள்ளனர். 

Also Read: சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!

இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட்டுகளையும், உமேஷ் உயாதவ் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை