ஆஸ்திரேலிய அணி சமீபத்தில் நடைபெற்று முடிந்த இந்திய அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில் இந்த பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்திய அணியின் ஜாம்பவான் வீரார்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரது செயல்பாடுகள் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க முடியாமல் தடுமாறியதன் காரணமாக கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில் இந்திய அணி அடுத்ததாக இங்கிலாந்து அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ள்து. அதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது ஜனவரி 22ஆம் தேதி தொடங்கும் நிலையில், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது பிப்ரவரி 06ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது.

Advertisement

இதையடுத்து இத்தொடருக்கான இந்திய அணியையும் பிசிசிஐ விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்டோருக்கு ஓய்வளிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியானது. ஆனால் பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் மோசமான ஃபார்மின் காரணமாக சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் தற்போது இங்கிலாந்து தொடரில் விளைடாடுவார்கள் என்று கூறப்படுகிறது. 

அதேசமயம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் போது காயத்தை சந்தித்துள்ள ஜஸ்பிரித் பும்ரா, சாம்பியன்ஸ் கோப்பையை கருத்தில் கொண்டு ஓய்வளிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இருப்பினும் ரோஹித் மற்றும் விராட் கோலி இருவரும் நிச்சயம் இங்கிலாந்து தொடரில் விளையாட வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இதுதவிர்த்து ஆஸ்திரேலியவுக்கு எதிரான தோல்வியால் விமர்சனங்களை எதிர்கொண்டு வரும் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் வரை தனது பொறுப்பில் நீடிப்பார் என்பது உறுதியாகியுள்ளது. 

இதுகுறித்து பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகையில், "ஆமாம், ஒரு ஆய்வுக் கூட்டம் நிச்சமாக இருக்கும், ஆனால் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் வரை யாரையும் பதவியில் இருந்து நீக்கும் முடிவு நிச்சயம் இருக்காது. ஒரு தொடரில் பேட்டர்களின் மோசமான ஆட்டத்திற்காக ஒரு பயிற்சியாளரை நீங்கள் நீக்க முடியாது. அதனால் அடுத்தடுத்த தொடர்களிலும் கௌதம் கம்பீர் பயிற்சியாளராக இருப்பார். மேற்கொண்டு இங்கிலாந்து தொடரில் விராட் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரும் இடம்பெறுவார்கள். இதன்மூலம் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் அவர்களால் கவனம் செலுத்த இயலும்” என்று தெரிவித்துள்ளனர். 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

நடந்து முடிந்த பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில், இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி முதல் போட்டியில் சதமடித்திருந்தாலும், அதன்பின் விளையாடிய போட்டிகளில் ரன்களைச் சேர்க்க முடியாமல் தடுமாறினார். இதனால் அவர் இத்தொடரில் மொத்தமாகவே 190 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். மறுபுறம், தனது இரண்டாவது குழந்தை பிறப்பு காரணமாக முதல் டெஸ்டைத் தவறவிட்ட ரோஹித் சர்மா, சிட்னியில் நடந்த ஐந்தாவது போட்டியில் ஓய்வெடுப்பதற்கு முன், மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் சேர்த்து வெறும் 31 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News