ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது வ்ரும் ஜூன் மாதம் முதல் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ளது. இத்தொடரில் பங்கேற்று விளையாடவுள்ள அனைத்து அணிகளையும் அந்நாட்டுக் கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்துள்ளன. அதன்படி ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) கடந்த மாதம் அறிவித்தது. 

Advertisement

அதன்படி இந்த அணியில் நீண்ட நாள்களாக தனது வாய்ப்பிற்காக காத்திருந்த நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை மிகச்சிறப்பாக வழிநடத்தி அணியின் பிளே ஆஃப் சுற்றுக்கு அழைத்துச் சென்றதுடன், இந்த சீசனில் அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்திய 5 அரைசதங்களுடன் 500 ரன்களுக்கு மேல் விளாசியும் அசத்தியுள்ளார். 

Advertisement

இதன்மூலம் அவர் இந்திய அணிக்காகவும் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்துவார் என ரசிகர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில், சர்வதேச அரங்கில் சஞ்சு சாம்சன் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்த இதுவே சரியான தருணம் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் கெளதம் கம்பீர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய கம்பீர், “இப்போது சஞ்சு சாம்சன் உலகக் கோப்பை அணியில் இடம்பிடித்துள்ளார், மேலும் அவர் இந்திய அணிக்காக விளையாட வாய்ப்பு உள்ளது - அதனால் அவர் வாய்ப்பு கிடைத்தால், இந்தியாவுக்காக போட்டிகளை வென்று கொடுப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவம் அவருக்கு உள்ளது. அதனால் இனியும் நீங்கள் வாய்ப்பிற்காக காத்திருக்கும் புதிய வீரர் அல்ல என்பதை உணர வேண்டும்.

கடந்த ஓராண்டு காலமாக சஞ்சு சாம்சன் சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டங்களை விளையாடியுள்ளார், தற்போது ஐபிஎல் தொடரிலும் அபாரமான ஃபார்மில் உள்ளார். இப்போது உலகக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. எனவே, இந்த கட்டத்தில் சஞ்சு சாம்சன் தனது திறமையை உலகுக்கு காட்டுவார் என்று நம்புகிறேன்.  சர்வதேச கிரிக்கெட், அதுவும் உலகக் கோப்பை போன்ற ஒரு தொடரில் நீங்கள் சிறப்பாக செயல்படும் போது உலகம் முழுவதும் உங்கள் திறனை பறைசாற்றும். 

ஒரு கிரிக்கெட் வீரரை ஐந்து நிமிடம் பார்த்தாலே அவர் எப்படி விளையாடுவார் என்று சொல்லிவிடுவேன். சஞ்சு சாம்சன் விளையாடுவதை இந்த ஐபிஎல் தொடர் முழுவதும் பார்த்தேன். அவர் ஒரு மிகச் சிறந்த பேட்டர். இந்த உலகக்கோப்பை தொடரில் அவர் ஒரு பேட்டராகவும், விக்கெட் கீப்பராகவும் சிறப்பாக செயல்படுவார். அவர் யார் என்று அனைவருக்கும் காட்டுவதற்கும், தன் திறமையை வெளிப்படுத்துவற்கும் இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News