உலகக் கோப்பை தொடரில் அதிகம் எதிர்பார்க்கப்படும் போட்டிகளில் ஒன்றான இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மதியம் துவங்க இருக்கிறது. இந்த உலகக் கோப்பை தொடரில் இரு அணிகளுக்கும் முதல் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

இந்த நிலையில் இந்திய அணிக்கு ஒரு பெரிய பின்னடைவாக, இந்த ஆண்டு மிகச்சிறந்த பேட்டிங் ஃபார்மில் இருக்கும் இளம் வீரர் சுப்மன் கில் டெங்குவால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்கின்ற செய்தி அமைந்திருக்கிறது. அவர் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக களம் இறங்குவாரா? என்பது குறித்து நேற்று பேசியிருந்த தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியிருந்தபொழுது, இன்னும் 36 மணி நேரம் இருக்கிறது எனவே அவர் விஷயத்தில் நாங்கள் இறுதி நேரத்தில்தான் முடிவு எடுப்போம் என்று கூறியிருந்தார்.

Advertisement

ஆனால் இந்தக் காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளானவர்கள் சரியாவதற்கு ஏறக்குறைய ஒரு வாரமாவது ஆகும் என்று சொல்லப்படுகிறது. இந்த அடிப்படையில் பார்த்தால் அவர் இன்னும் இரண்டு போட்டிகளை சேர்த்து தவற விட கூட வாய்ப்பு இருக்கிறது.

தற்பொழுது இதுகுறித்து பேசிய ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ஆரோன் ஃபின்ச், “இந்த உலகக் கோப்பையில் தனித்து நிற்கப் போகின்ற விஷயம் அணிகளின் ஆழம்தான். பெரும்பாலான அணிகள் தங்களது சிறந்த பிளேயிங் லெவனுடன் செல்கின்றன.ஆனால் இது எப்பொழுதும் திட்டமிட்டபடி நடைபெறுவது கிடையாது. இது ஒரு நீண்ட தொடர் என்கின்ற காரணத்தினால், வீரர்களின் காயங்கள் மற்றும் சோர்வுகள் இருக்கிறது. 

இருப்பினும் இந்தியா மிகவும் வசதியாகவே இருக்கும். இதில் வித்தியாசம் என்னவென்றால் ஷுப்மன் கில் ஆஸ்திரேலிய அணியில் சேர்க்கும் பயம்தான். அவருக்கு சில நேரத்தில் பந்து வீச முடியாமல் ஆஸ்திரேலியா திணறுகிறது. ஏனென்றால் அவருக்கு எந்த பலவீனமும் இல்லை. அவர் உங்களுடைய சிறந்த பந்துகளை அடிக்கக்கூடிய வீரர். அவர் எப்படிப்பட்ட பந்தையும் ஆதிக்கம் செலுத்துகிறார். 

இந்த அடிப்படையில் அவர் இல்லாமல் இசான் கிஷானுக்கு பவர் பிளேவில் பந்து வீசுவது எளிதானது. கில் உடன் இசான் கிஷானை வைத்து பார்க்கும் பொழுது அவருக்கு இன்னும் சில டெக்னிக்கல் குறைபாடு இருக்கிறது. ஆரம்பத்தில் அவரது முன் கால் மூடுகிறது. இந்த நேரத்தில் அவரது விக்கெட்டை எடுப்பது சுலபம். அவர் கொஞ்சம் நிலைத்து நின்ற பின்பு தான் இயல்பு நிலைக்கு வருகிறார்” என்று கூறியுள்ளார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News