ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி 5 போட்டிகளை கொண்ட பார்டர்- கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் உள்ள ஆப்டாஸ் கிரிக்கெட் மிதானத்தில் நடைபெற்று முடிந்த இந்த நிலையில், அதில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்ததுடன் 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது.

Advertisement

இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது அடிலெய்டில் எதிர்வரும் டிசம்பர் 6ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக இந்திய அணியானது, ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணிக்கு எதிரான இரண்டு நாள்கள் கொண்ட பகலிரவு டெஸ்ட் போட்டிக்கான பயிற்சி ஆட்டத்தில் விளையாடவுள்ளன. இதற்காக இந்திய அணி வீரர்கள் அடிலெய்ட் சென்றுள்ளனர். 

Advertisement

இதனையொட்டி ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸ், இந்திய கிரிக்கெட் வீரர்களை வியாழக்கிழமை அழைத்து அவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அணி வீரர்கள் அனைவரையும், பிரதமர் அல்பானீஸிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். மேலும் முதல் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பொறுப்பு கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் விராட் கோலி இருவருக்கும் பிரதமர் அல்பானீஸ் வாழ்த்து தெரிவித்தார்

மேலும் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் நடந்த கூட்டத்திலும் பங்கேற்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா உரையாடினார். அப்போது பேசிய அவர், “இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா. அது விளையாட்டாக இருந்தாலும் சரி, வர்த்தக உறவுகளாக இருந்தாலும் சரி, நாம் நெடுங்காளமாக சிறந்த உறவில் உள்ளோம்.  பல ஆண்டுகளாக, இங்கு வருவதையும், கிரிக்கெட் விளையாடுவதையும், நாட்டில் உள்ள பல்வேறு கலாச்சாரங்களை அனுபவிப்பதிலும் நாங்கள் மகிழ்ந்துள்ளோம்.

மேலும் வெளிப்படையாக கூறவேண்டும் எனில் ஆஸ்திரேலிய அணி எப்போதும் சவாலான ஒன்றாகும். ஏனெனில் இங்குள்ள மக்களிடம் உள்ள ஆர்வத்தின் காரணமாக இங்கு வந்து விளையாடும் வீரர்கள் தங்களது போட்டி திறனை வெளிப்படுத்த ஆர்வமுடன் உள்ளனர். இதனால் தன் ஒவ்வொரு முறையும் இங்கு வந்து கிரிக்கெட் விளையாடுவது எங்களுக்கு எப்போதுமே பெரும் சவாலாக இருக்கிறது.

 

Advertisement

கடந்த மற்றும் முந்தைய வாரத்தில் நாங்கள் சில வெற்றிகளைப் பெற்றுள்ளோம், அந்த வேகத்தை நாங்கள் உருவாக்க விரும்புகிறோம், ஆஸ்திரேலியாவில் உள்ள கலாச்சாரத்தை நாங்கள் அனுபவிக்க விரும்புகிறோம். பல்வேறு நகரங்கள் நமக்கு வித்தியாசமான உணர்வைத் தருகின்றன. நாங்கள் இங்கு வருவதையும், எங்கள் பயணத்தை அனுபவிப்பதையும் விரும்புகிறோம். அடுத்த சில வாரங்களில், நாங்கள் அடைய விரும்புவதை அடைவதில் மகத்தான பங்கை வகிப்பதற்காக ஆஸ்திரேலிய பொதுமக்களையும், இந்திய ரசிகர்களையும் மகிழ்விக்க முடியும். இது ஒருபோதும் எளிதானது அல்ல.

நாங்கள் இந்த ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் சில கிரிக்கெட் விளையாடுவதையும், அதே நேரத்தில் இங்குள்ள ஒவ்வொரு இடத்தையும் ரசிக்க ஆவலுடன் காத்திருக்கிறோம். ஏனெனில் ஆஸ்திரேலியா ஒரு அற்புதமான இடம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதனால் எதிர்வரும் இந்த மாதத்தில் நல்லதை எதிர்நோக்குகிறோம். அதற்காக நாங்கள் அனைவரும் உற்சாகமாக இருக்கிறோம், நாங்கள் மகிழ்விக்க முடியும் என்று நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News