சீனாவில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்தியா மற்றும் இலங்கை அணிகள் முன்னேறின. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

Advertisement

அதன்படி களமிறங்கிய இந்திய அணி ஸ்மிருதி மந்தனா - ஷஃபாலி வர்மே இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஸ்மிருதி மந்தனா ஒருபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபக்க ஷஃபாலி வர்மா 9 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் களமிறங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது.

Advertisement

இதில் இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஸ்மிருதி மந்தனா 46 ரன்களிலும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 42 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர். அதன்பின் களமிறங்கிய ரிச்சா கோஷ், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், பூஜா வஸ்திரேகர், அமஞ்ஜோத் கவுர் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்களைச் சேர்த்தது.  

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணியில் அனுஷ்கா சஞ்சீவனி ஒரு ரன்னிலும், விஷ்மி குனரத்னே ரன்கள் ஏதுமின்றியும் ஆட்டமிழக்கம் கேப்டன் சமாரி அத்தபத்துவும் 12 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் இணைந்த ஹாசினி பெரேரா - நிலாக்சி டி சில்வா ஆகியோர் ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

இதில் ஹாசினி பெரேரா 25 ரன்களுக்கும், நிலாக்சி டி சில்வா 23 ரன்களுக்கும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஒஷாதி ரனசிங்கா 19 ரன்களிலும், கவிஷ தில்ஹாரி 5 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 97 ரன்களை மட்டுமே எடுத்தது.  

இதன்மூலம் இந்திய மகளிர் அணி 19 ரன்கள் வித்தியாத்சத்தில் இலங்கை மகளிர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், நடப்பு ஆகிய விளையாட்டுப்போட்டிகளில் தங்கப்பதக்கத்தையும் வென்று அசத்தியுள்ளது. இப்போட்டியில் தோல்வியடைந்த இலங்கை அணி வெள்ளிப்பதக்கத்தை உறுதிசெய்தது.   

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News