இங்கிலாந்து அணி தற்சமயம் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இத்தொடரில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 1-1 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலை பெற்றிருந்தது. 

Advertisement

இதையடுத்து நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது வெலிங்டனில் நடைபெற்றது. இப்போட்டியிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணி 323 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இப்போட்டியில் சதமடித்து அசத்திய ஹாரி புரூக் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

Advertisement

இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது டிசம்பர் 14ஆம் தேதி முதல் ஹாமில்டனில் நடைபெற இருக்கிறது. இப்போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றிபெறும் பட்சத்தில் நியூசிலாந்தை வீழ்த்தும் பட்சத்தில் தொடரை முழுமையாக கைப்பற்றும். இதனால் நியூசிலாந்து அணி எப்படியாவது இப்போட்டியில் வெற்றிபெற்று தொடரை முழுமையாக இழப்பதில் இருந்து தடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. 

இதனால் இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகிறது. இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக பேசிய இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட், நியூசிலாந்து தொடரில் ஆபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஹாரி புரூக் தான் தற்போது உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர் என்று பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “என்னைக் கேட்டால், இப்போது உலகின் சிறந்த வீரர் ஹாரி புரூக் தான். அவரது ஆட்டம் மிகவும் நன்றாக உள்ளது. அவரால் அழுத்தத்தை சமாளிக்க முடியும், அவர் லாங் ஹிட்களை அடிக்க முடியும், அவர் சுழற்பந்து வீச்சையும் சிறப்பாக விளையாட முடியும் என்பதால், அவருக்கு பந்து வீசுவது மிகவும் கடினம். அவர் இந்த வாரம் மற்றொரு சதம் அடித்துள்ளார். மேலும் அவர் இதுவரை விளையாடிய சிறந்த வீரர்களில் ஒருவராகவும் தகழ்கிறார்” என்று பாராட்டியுள்ளார். 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

ஜோ ரூட் கூறியதைப் போலவே நடைபெற்று வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஹரி புரூக் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்த டெஸ்ட் தொடரில் இதுவரை 2 போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், ஹாரி புரூக் மூன்று இன்னிங்ஸில் களமிறங்கி அதில் இரண்டு சதங்கள் மற்றும் ஒரு அரைசதம் என மொத்தமாக 349 ரன்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News