உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களில் விதர்பா அணிக்காக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக களமிறங்கி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தும் ஜித்தேஷ் சர்மா ஆசிய விளையாட்டுப்போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். அண்மையில் இந்தியாவில் நடைபெற்று முடிந்த 16ஆவது ஐபிஎல் தொடரில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

ஏற்கனவே இந்த ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான தொடரின் போது இந்திய அணியில் ஜித்தேஷ் சர்மா இடம் பிடித்திருந்தாலும் இதுவரை அவர் இந்திய அணிக்காக அறிமுகமாகாமல் இருந்து வருகிறார். இந்நிலையில் எதிர்வரும் இந்த ஆசிய விளையாட்டுபோட்டிகளில் அவர் பிளேயிங் லெவனில் விளையாட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

இந்நிலையில் தான் முதல் முறையாக இந்திய அணிக்கு தேர்வான போது இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தனக்கு ஒரு அறிவுரையை கூறியதாகவும், அது என்ன? என்பது குறித்த தகவலை தற்போது ஜித்தேஷ் சர்மா தெளிவாக எடுத்துரைத்துள்ளார். 

இதுகுறித்து பேசிய ஜித்தேஷ் சர்மா, “இதுபோன்ற மதிப்பு மிக்க நிகழ்வில் கலந்து கொண்டு, புகழ்பெற்ற விளையாட்டு வீரர்களை சந்திப்பதில், நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறேன். நான் தற்பொழுது விதர்பா அணியுடன் சீசனுக்கான முந்தைய பயிற்சி முகாமில் இருக்கிறேன். நாங்கள் பழைய சிவில் லைன்ஸ் மைதானத்தில் பயிற்சி செய்கிறோம்.

எனக்கு நான் அணியில் தேர்வானதை பற்றி நண்பர் ஒருவர் தெரிவிக்க வந்தார். நான் அப்பொழுது தூங்கச் சென்று விட்டேன். எனக்கு முன்பே எனது பெற்றோர்கள் தூங்க சென்று விட்டார்கள். அவர்களிடம் காலையில் இந்த விஷயத்தை கூறிய பொழுது அவர்கள் ஏற்கனவே தெரியும் என்று சொன்னார்கள். நான் சூரியகுமார் யாதவை கவனிக்க முயற்சி செய்கிறேன். நான் அவரைப் போல திறமைசாலி கிடையாது. 

ஆனால் ஆபத்து இல்லாத ஷாட்களை அவர் எப்படி விளையாடுகிறார்? களத்தை அவர் எப்படி கையாளுகிறார்? என்பது குறித்து அவர் விளையாடும் வீடியோக்களை தொடர்ந்து பார்த்து தெரிந்து கொண்டு வருகிறேன். அவரது பேட்டிங்கில் இருந்து கற்றுக் கொள்ள முயற்சி செய்கிறேன். ஒவ்வொருவருக்கும் வேறு வேறு திறமைகள் இருக்கின்றன. நான் எனது ஆட்டத்தை ஆராய்ந்து 360 டிகிரிக்கு மாற்ற முயற்சி செய்கிறேன்.

Advertisement

ஒருவரை எப்படி மேம்படுத்துவது என்று எப்பொழுதும் விவாதங்கள் இருக்கிறது. நான் கடந்த முறை இந்திய அணிக்காக உள்நாட்டில் நடந்த போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பொழுது ராகுல் டிராவிட் சாருடன் எனது ஆட்டத்தை மேம்படுத்துவது குறித்து பேசினேன். நீங்கள் இதுவரை எப்படி பேட்டிங் செய்து வருகிறீர்களோ அதை அப்படியே தொடருங்கள் என்று அவர் சொன்னார். சில பேட்டிங் பொசிஷன்களுக்கு என்னைப் போன்று விளையாடும் வீரர்களை எதிர்பார்ப்பதாகவும் அவர் சொன்னார்” என்று கூறியுள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News