அணித்தேர்வு பற்றி யோசித்து என் மீது அழுத்தம் கொடுக்க விரும்பவில்லை - சிராஜ்

Updated: Thu, Mar 20 2025 22:39 IST
Image Source: Google

பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்த ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி கடந்த மார்ச் 9ஆம் தேதி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றது.

இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் யாரும் எதிர்பாராத வகையில் முகமது சிராஜுக்கு இடம் கிடைக்கவில்லை. அதிலும் குறிப்பாக கடந்த 2024ஆம் ஆண்டில் அதிக ஒருநாள் விக்கெட்டை கைப்பற்றிய நிலையிலும், அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. மேற்கொண்டு பும்ரா போன்றா வீரர் இல்லாத நிலையிலும் சிராஜுக்கு அணியில் இடம் கிடைக்காதது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார். 

அதிலும் குறிப்பாக சிராஜின் நீக்கம் குறித்து பேசிய இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, “ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவாரா இல்லையா என்பது எங்களுக்குத் தெரியவில்லை. எனவே, புதிய பந்தையும் பழைய பந்தையும் கொண்டு பந்து வீசக்கூடிய ஒருவரை தேர்வுசெய்ய நாங்கள் விரும்பினோம். அதனால்தான், அர்ஷ்தீப் சிங்கிறு நாங்கள் வாய்ப்பு கொடுத்துள்ளோம். அதேசமயம் சிராஜ் புதிய பந்தில் மட்டும் சிறந்த செயல்திறனைக் கொண்டுள்ளார். 

இதனால் முகமது சிராஜின் திறன் சற்று குறைவதாக நாங்கள் உணர்கிறோம். அவர் தனது வாய்ப்பை தவறவிட்டது முற்றிலும் துரதிர்ஷ்டவசமானது. மேலும் அர்ஷ்தீப் சிங் அதிக அளவிலான ஒருநாள் போட்டிகளில் விளையாடவில்லை. ஆனால், அவர் நீண்ட காலமாக டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவரால் அழுத்தமான சூழல்களில் சிறப்பாக பந்துவீச முடியும் என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும்” என்று தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக பேட்டி ஒன்றில் பேசிய முகமது சிராஜ், “அணியின் தேர்வு என் கையில் இல்லை. என் கைகளில் ஒரு கிரிக்கெட் பந்து மட்டுமே இருக்கிறது, அதை வைத்து என்னால் முடிந்ததைச் செய்ய விரும்பினேன். நான் என் செயல்திறனில் கவனம் செலுத்த விரும்புவதால், தேர்வு பற்றி யோசித்து என் மீது அழுத்தம் கொடுக்க விரும்பவில்லை. நான் சில வருடங்களாக விளையாடி வருகிறேன், பொதுவாக, எங்களுக்கு அவ்வளவு ஓய்வு கிடைப்பதில்லை.

ஆனால் இப்போது எனக்கு சிறிது ஓய்வு கிடைத்ததால், எனது உடற்தகுதி மற்றும் பந்துவீச்சுத் திறன்களை மேம்படுத்திக் கொண்டேன். புதிய மற்றும் பழைய பந்துகளில் எப்படி பந்து வீசுவது என்பதில் நான் மிகவும் கடினமாக உழைத்துள்ளேன், மேலும் எனது மெதுவான பந்துகள் மற்றும் யார்க்கர்களில் வேலை செய்ய விரும்பினேன். இந்த முறை நான் அந்த பகுதிகளில் அதிகம் வேலை செய்துள்ளேன் , இந்த ஐபிஎல்லில் விஷயங்கள் எனக்கு எப்படி அமையும் என்பதைப் பார்ப்போம்” என்று தெரிவித்துள்ளார். 

Also Read: Funding To Save Test Cricket

எதிர்வரும் ஐபிஎல் தொடரில் குஜராஜ் டைட்டன்ஸ் அணிக்காக விளையாட முகமது சிராஜ் ஒப்பந்தமாகியுள்ளார். முன்னதாக வீரர்கள் ஏலத்திற்கு முன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சிராஜை விடுத்தது. அதன்படி ரூ. 2கோடி எந்த அடிப்படை தொகையுடன் ஏலத்தில் பங்கேற்ற அவரை கடும் போட்டிக்கு பிறகு குஜராத் டைட்டன்ஸ் அணியானது ரூ.12.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை