இந்திய அணி ஐசிசி நடத்தும் தொடர்களில் நாக் அவுட் போட்டிகளில் தொடர்ந்து மோசமாக செயல்பட்டு வருவது விமர்சனத்திற்கு பெரிய அளவில் உள்ளாகி வருகிறது. மிகக் குறிப்பாக தற்போது ரோஹித் சர்மா கேப்டன்சியின் கீழ் முக்கியமான போட்டிகளில் திட்டங்களும் மனநிலையும் இந்திய வீரர்களிடம் மிகவும்மோசமாக இருக்கிறது.

Advertisement

இதுகுறித்து பேசி இருந்த கவாஸ்கர், தான் ரோஹித் சர்மாவிடம் அதிகம் எதிர்பார்த்ததாகவும், ஆனால் ரோகித் சர்மாவின் செயல்பாடுகள் தமக்கு கேப்டனாக திருப்தி அளிக்கவில்லை என்றும், சிறந்த வீரர்களை வைத்திருந்தும் மிக மோசமாக கேப்டனாக செயல்படுகிறார் என்றும் கடுமையாக விமர்சனம் செய்து பேசியிருந்தார்.

Advertisement

ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர் இந்தியாவில் அடுத்த மூன்று மாதத்தில் நடக்க இருக்கின்ற நிலையில், கவாஸ்கர் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மீது வைத்த விமர்சனம் மிகவும் முக்கியமான ஒன்றாக கிரிக்கெட் உலகத்தில் பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், ரோகித் சர்மா தலைமையின் கீழ் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடியவருமான ஹர்பஜன் சிங் கவாஸ்கர் கருத்துக்கு எதிராக ரோஹித் சர்மாவுக்கு ஆதரவாக தற்பொழுது தனது கருத்தை முன் வைத்திருக்கிறார்.

இதுகுறித்து பேசிய ஹர்பஜன் சிங், “ரோஹித் சர்மாவை விமர்சிப்பதில் மக்கள் சற்று அதிகமாக போகிறார்கள் என்று நான் உணர்கிறேன். கிரிக்கெட் என்பது ஒரு குழு விளையாட்டு. ஒரு தனிப்பட்ட வீரர் ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு எடுத்துச் செல்ல முடியாது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி சிறப்பாக செயல்படவில்லை என்பது உண்மைதான். அந்த இடத்தில் விமர்சனம் செய்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து செல்லுங்கள்.

இதில் ரோஹித்தை மட்டுமே விமர்சனம் செய்து கொண்டிருப்பது சரி கிடையாது. அவர் ரன்கள் எடுப்பதில்லை, எடையை குறைக்கவில்லை, சிறப்பான கேப்டன் இல்லை இப்படிப் பேசிக் கொண்டே இருப்பதில் பயன் கிடையாது. அவர் ஒரு சிறந்த தலைவர் என்று நான் நினைக்கிறேன். நான் அவருடன் விளையாடினேன். அவரை நான் மிக அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். மும்பை இந்தியன்ஸ் டிரெஸ்ஸிங் ரூமில் மட்டுமல்ல இந்திய அணியின் ட்ரெஸ்ஸிங் ரூமிலும் அவருக்கு நல்ல மரியாதை உண்டு. எனவே சமீபத்திய முடிவுகளின் அடிப்படையில் அவரை மதிப்பிடுவது சரியான ஒன்று கிடையாது.

அவர் நன்றாக வருவார் என்று நாம் நம்பிக்கை காட்ட வேண்டும். நீங்கள் இதைச் செய்யவில்லை அதைச் செய்யவில்லை என்று சொல்வதை விட, நாம் அவரை ஆதரிக்க வேண்டும். பிசிசிஐ-யின் ஆதரவு இருந்தால் நீங்கள் சுதந்திரமாக செயல்படலாம். தோனி மற்றும் விராட் கோலிக்கு மட்டுமல்ல பின்னோக்கி சென்று பார்த்தால் அந்த காலகட்டத்தில் இருந்த கேப்டன்களுக்கு பிசிசிஐ ஆதரவு நிறையவே இருந்திருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News