இந்தியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமான வெற்றி பெற்றது. அதனால் 1992 முதல் இதுவரை தங்களுடைய சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிராக ஒரு தொடரில் தோற்காமல் இருந்து வரும் மிகப்பெரிய கௌரவத்தை தக்க வைத்துக் கொண்ட அந்த அணி ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது.

Advertisement

முன்னதாக சென்சூரியன் நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் டேவிட் பெட்டிங்ஹாம் அறிமுகமாக களமிறங்கும் வாய்ப்பை பெற்றார். அந்த வாய்ப்பில் சிறப்பாக பேட்டிங் செய்த அவர் 7 பவுண்டரி 2 சிக்சருடன் அறிமுக போட்டியிலேயே அரை சதமடித்து 56 ரன்கள் குவித்து தென் ஆப்பிரிக்காவின் வெற்றியில் பங்காற்றினார்.

Advertisement

கடந்த 2016இல் கார் விபத்தில் மிகப்பெரிய காயத்தை சந்தித்த காரணத்தால் பின்தங்கிய அவர் அதற்காக மனம் தளராமல் மீண்டும் குணமடைந்து முதல் தர கிரிக்கெட்டில் 89 போட்டிகளில் 6,000க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். இதன் காரணமாக தற்போது 29 வயதில் தென் ஆப்பிரிக்காவுக்காக விளையாட அறிமுகமாகியுள்ள அவர் இந்திய ஜாம்பவான்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா தமக்கு பிடித்த வீரர்கள் என்று கூறியுள்ளார்.

மேலும் தடுமாற்றமான சமயங்களில் விராட் கோலியின் டெக்னிக்கை காப்பி அடிப்பேன் என்று வெளிப்படையாக தெரிவிக்கும் அவர், இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கவுண்டி தொடரில் விளையாடும் போது தமக்கு உதவியதாக கூறியுள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “இந்திய வீரர்களில் எனக்கு மிகவும் பிடித்தவர்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா. 13 – 18 வயது காலகட்டங்களில் இருந்த போது நான் ஜேக் கேலிஸ் மற்றும் கிப்ஸ் ஆகியோரின் டெக்னிக்கை எனது ஆட்டத்தில் இணைக்க முயற்சித்தேன். இருப்பினும் நாளடைவில் சில போட்டிகளில் மோசமாக விளையாடிய போது பின்னர் என்னுடைய டெக்னிக்கை விராட் கோலியை பார்த்து காப்பி செய்து மாற்ற தொடங்கினேன். 

அதே போலவே ரோகித் சர்மாவையும் பின்பற்றினேன். மேலும் இங்கிலாந்தில் விளையாடிய போது பென் ஸ்டோக்ஸிடம் நிறைய பேசியுள்ளேன். பொதுவாக அவர் கிரிக்கெட்டைப் பற்றி என்னிடம் அதிகம் பேச மாட்டார். மாறாக கடினமான நேரங்களில் அழுத்தத்தை எப்படி சமாளிப்பது என்பதை பற்றி என்னிடம் பேசியுள்ளார். உலகத்தரம் வாய்ந்த அவரைப் போன்ற வீரரிடம் பேசியது என்னுடைய முதல் டெஸ்ட் போட்டியில் உதவியது” என்று கூறியுள்ளார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News