ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டிகள் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகின்றன . மார்ச் 31ஆம் தேதி தொடங்கிய இந்த தொடர் வருகின்ற மே மாதம் 28ஆம் தேதி முடிவடைய இருக்கிறது . இதனைத் தொடர்ந்து இந்திய அணி இங்கிலாந்து சென்று ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாட இருக்கிறது . இந்தப் போட்டி இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் ஜூன் மாதம் ஏழாம் தேதி துவங்கி பதினொன்றாம் தேதி வரை நடைபெற இருக்கிறது .

Advertisement

இந்தப் போட்டி தொடர்களில் பங்கேற்கும் இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணி வீரர்களின் விவரங்கள் இரண்டு அணியின் கிரிக்கெட் நிர்வாகத்தால் ஏற்கனவே வெளியிடப்பட்டு விட்டன . இந்திய அணியின் முன்னணி வீரரான அஜிங்கியா ரஹானே நீண்ட நாட்களுக்குப் பிறகு அணிக்கு மீண்டும் திரும்பி இருக்கிறார் .

Advertisement

இந்நிலையில் இந்திய அணியின் தேர்வு மற்றும் வெற்றிக்கான வாய்ப்புகள் குறித்து கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரும் வர்ணணையாளருமான ரவி சாஸ்திரி தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார் . மேலும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் தன்னுடைய பணிக்காலத்தில் நடைபெற்ற சில விஷயங்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார் .

இந்திய அணியின் தேர்வு பற்றி பேசிய ரவி சாஸ்திரி, “இந்தியா மிகச் சிறப்பான ஒரு அணியை தேர்ந்தெடுத்திருக்கிறது . அணியின் முன்னணி வீரர்களான ஸ்ரேயாஸ் ஐயர், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் ஆகியோர் அணியில் இடம்பெறாத நிலையில் நல்ல திறமையான வீரர்களை கொண்ட ஒரு அணியை இந்தியா தேர்வு செய்து இருக்கிறது.

ரோஹித் சர்மா காயமடைந்தால் விராட் கோலி தான் அணியை வழிநடத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன் . அப்படித்தான் ராகுல் ட்ராவிட் விரும்புவார் என்று நினைக்கிறேன் . கடந்த ஆண்டு இந்தியா இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்த போது நான் பயிற்சியாளராக இருந்திருந்தால் இறுதி டெஸ்ட் போட்டிக்கு விராட் கோலியை கேப்டனாக நியமித்திருக்க பரிந்துரை செய்திருப்பேன் . 

அதுதான் சரியான முடிவாக இருக்கும் என்று நான் கருதுகிறேன் . ஏனென்றால் 2021 ஆம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தான் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்று இருந்தது . மேலும் விராட் கோலி போன்ற ஒரு கேப்டனால் வீரர்களிடமிருந்து சிறந்த திறமையை வெளிக் கொண்டுவர முடியும்.

Advertisement

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு ரோஹித் சர்மா முழு உடல் தகுதியுடன் இருப்பார் என்று கருதுகிறேன் . அவர்தான் அணியின் கேப்டன் . ஒருவேளை துரதிஷ்டவசமாக அவர் காயம் அடைந்து விட்டால் இந்திய அணிக்கு விராட் கோலி கேப்டனாக இருப்பது தான் சரியானது. நான் பயிற்சியாளராக இருந்தால் என்னுடைய முடிவும் அதுவாகத்தான் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News