இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி லீக் சுற்றுடன் வெளியேறியது. குறிப்பாக ஹஸரங்கா, சனகா போன்ற முக்கிய வீரர்கள் காயத்தை சந்தித்து வெளியேறியதால் பின்னடைவை சந்தித்த அந்த அணிக்கு எஞ்சிய வீரர்களும் சுமாராக செயல்பட்டதால் 9 போட்டிகளில் 2 வெற்றி 7 தோல்விகளை பதிவு செய்து மோசமான வீழ்ச்சியை சந்தித்தது.

Advertisement

அதிலும் குறிப்பாக இந்தியாவுக்கு எதிராக வெறும் 55 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 302 ரன்கள் வித்தியாசத்தில் அந்த அணி படுதோல்வியை சந்தித்தது. அதை விட 1992 உலக சாம்பியனான இலங்கை அணி ஆஃப்கானிஸ்தான், வங்கதேசம் போன்ற கத்துக்குட்டிகளாக கருதப்படும் அணிகளுக்கு எதிராக கூட கொஞ்சமும் போராடாமல் அவமான தோல்விகளை சந்தித்தது. இதனால் ஏமாற்றமும் கோபமும் அடைந்த இலங்கை விளையாட்டுத்துறை தங்களுடைய வாரியத்தை கலைப்பதாக அதிகாரப்பூர்வமாக கடந்த வாரம் அறிவித்தது. 

Advertisement

முதலில் இலங்கை அணியை வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் செல்லாத நிர்வாகிகள் மட்டும் கலைக்கப்பட்ட நிலையில் வங்கதேசத்துக்கு எதிரான தோல்வியால் அந்நாட்டு வாரியமே மொத்தமாக கலைக்கப்படுவதாக இலங்கை அரசின் விளையாட்டு துறை தெரிவித்தது. இதற்கு இலங்கை வாரியத்தின் நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்து விரைவில் வளர்ச்சி பாதைக்கு தேவையான நடவடிக்கைகள் எடுப்போம் என்று உறுதியளித்ததை தொடர்ந்து நீதிமன்றம் அந்த தடையை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது. 

இந்நிலையில் இன்று முதல் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு இலங்கை அணியை இடைநீக்கம் செய்வதாக ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதாவது ஒரு வாரியத்தின் செயல்பாடுகளில் அந்நாட்டின் அரசு அல்லது அரசியல்வாதிகள் அல்லது அரசாங்க நடவடிக்கைகள் தலையிடக்கூடாது என்பது ஐசிசியின் முக்கியமான விதிமுறையாகும். ஆனால் அதை இலங்கை அரசு மீறி இலங்கை வாரியத்தை கலைத்து தலையிட்டதால் இந்த தடை விதிக்கப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது. 

மேலும் இலங்கை அரசு தலையீடுகள் இல்லாமல் இலங்கை வாரியம் சுதந்திரமாக செயல்படும் வரை இந்த தடை நீடிக்கும் என்றும் ஐசிசி தெளிவுபடுத்தியுள்ளது. முன்னதாக 2023 ஜனவரி மாதம் இந்தியாவுக்கு எதிராக 317 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற இலங்கை 2023 ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் 50 ரன்களுக்கு சுருண்டு தோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் இந்த உலகக் கோப்பையிலும் 55க்கு ஆல் அவுட்டாகி மோசமான தோல்வியை சந்தித்ததே இலங்கை வாரியம் கலைக்கப்பட்டு இன்று தடையை சந்திக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது.

மேலும் ஐசிசியின் இந்த இடைநீக்கம் காரணமாக இலங்கை அணியால் எந்தவொரு ஐசிசி தொடர்களிலும் பங்கேற்கமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இலங்கை அரசு தலையீடுகள் இல்லாமல் இலங்கை வாரியம் சுதந்திரமாக செயல்படும் வரை இந்த தடை நீடிக்கும் என்றும் ஐசிசி தெளிவுபடுத்தியுள்ளதால் கூடிய விரைவில் கிரிக்கெட் வாரியம் அமைக்கப்பட்டு இடைநீக்கத்திலிருந்து மீளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News