இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகள் கொண்ட  பார்டர்க் - கவாஸ்கா் கோப்பை தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்று, 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றிருந்தது. இந்நிலையில் இரு அணிகலுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் ஆட்டம் இந்தூரில் நடைபெற்றது. 

Advertisement

அதன்படி ப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 109 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய மேத்யூ குன்னமேன் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். 

Advertisement

அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 197 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் 88 ரன்கள் முன்னிலை பெற்றது. உஸ்மான் கவாஜா அதிகபட்சமாக 60 ரன்களையும், மாா்னஸ் லபுஸ்சேன் 31 ரன்களையும் எடுத்தனா்.இந்திய தரப்பில் அற்புதமாக பந்துவீசிய ஸ்பின்னா்கள் ரவீந்திர ஜடேஜா 4-76, அஸ்வின் ரவிச்சந்திரன் 3-44, உமேஷ் யாதவ் 3-12 விக்கெட்டுகளையும் வீழ்த்தினா்.

இதையடுத்து தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடத் தொடங்கிய இந்திய அணி முதல் 16 ஓவா்களில் வெறும் 30 ரன்களையே சோ்த்தது. அதில் ரோஹித் சா்மா 12, கில் 5, விராட் கோலி 13, ரவீந்திர ஜடேஜா 7, ஷ்ரேயஸ் ஐயா் 26, ஸ்ரீகா் பரத் 3, அஸ்வின் 16, உமேஷ் யாதவ் 0, சிராஜ் 0 என சொற்ப ரன்களுடன் நடையைக் கட்டினா்.

நிலைத்து நின்று ஆடக் கூடிய சட்டேஷ்வர் புஜாரா மட்டுமே 142 பந்துகளில் 1 சிக்ஸா், 5 பவுண்டரியுடன் 59 ரன்களுடன் அரைசதம் விளாசி அவுட்டானாா். இதனால் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 60.3 ஓவா்களில் இந்தியா 163 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய தரப்பில் ஸ்பின்னா் நாதன் லயன் அபாரமாக பந்துவீசி 8-64 விக்கெட்டுகளை வீழ்த்தினாா். 

இதனால் இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு வெறும் 76 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது. இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறக்கிய ஆஸ்திரேலிய அணியில் உஸ்மான் கவாஜா சந்தித்த 2ஆவது பந்திலேயே ரவிச்சந்திரன் அஸ்வினிடம் விக்கெட்டை இழந்தார். ஆனால் பின்னர் ஜோடி சேர்ந்த மார்னஸ் லபுசாக்னே - டிராவிஸ் ஹெட் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர். 

Advertisement

முதல் 10 ஓவர்கள் வரை நிதானம் காத்த இந்த இணை அதன்பின் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியதுடன், விக்கெட்டுகளையும் இழக்காமல் இந்திய அணிக்கு அதிர்ச்சி கொடுத்தனர். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி மூன்றாம் நாள் உணவு இடைவேளைக்கு முன்னரே இலக்கை அடைந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. 

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டிராவிஸ் ஹெட் 49 ரன்களையும், மார்னஸ் லபுசாக்னே 28 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி தங்களது அடுத்தடுத்த தோல்விக்கு பதிலடி கொடுத்து 1-2 என்ற கணக்கில் தொடரில் நீடித்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி ஜூன் மாதம் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News