பார்டர் கவாஸ்கர் கோப்பையின் நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் மார்ச் 9ஆம் தேதி தொடங்கியது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 255 ரன்களுக்கு நான்கு விக்கெட் களை இழந்திருந்தது. 

Advertisement

அதன்பின் நேற்று நடைபெற்ற இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய ஆஸ்திரேலியா அணியில் உஸ்மான் கவாஜா மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோர் மிகச் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இதில் இருவரும் சதமடித்து அசத்தினர். இதன்மூலம் ஆஸ்திரேலியா அணி 480 ரன்கள் அவுட் ஆனது. இந்திய அணியின் பந்துவீச்சில் ரவிச்சந்திரன் அஸ்வின் சிறப்பாக பந்துவீசி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

Advertisement

இதனைத் தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்தியா இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 36 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி இரண்டாவது நாள் ஆட்டத்தை முடித்தது இந்தியா. அதன்பின் இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தை கேப்டன் ரோஹித் சர்மா 17 ரன்களுடனும் சுப்மண் கில் 18 ரன்கள்டனும் தொடர்ந்தன்ர். 

இதில் அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 35 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். அதன்பின் கில்லுடன் இணைந்த புஜாரா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதேசமயம் சிறப்பாக விளையாடி வந்த ஷுப்மன் கில் அரைசதம் கடந்து அசத்தினார். 

இதன்மூலம் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 129 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் ஷுப்மன் கில் 65 ரன்களுடனும், செட்டேஷ்வர் புஜாரா 22 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் குன்னமேன் ஒரு விக்கெட்டை இழந்தனர். இதையடுத்து 351 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்திய அணி விளையாடவுள்ளது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News