இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதலில் நடைபெற்ற டி20 தொடரை இலங்கை அணி 1-2 என்ற கணக்கில் பறிகொடுத்தது. இதையடுத்து, 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. 

Advertisement

இந்தியா - இலங்கை இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கௌகாத்தியில் உள்ள பர்சபரா ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Advertisement

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்தது. 

அதன்படி இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக அவிஷ்கா ஃபெர்னாண்டோ - நுவனிந்து ஃபெர்னாண்டோ இணை களமிறங்கினர். இதில் அவிஷ்கா ஃபெர்னாண்டோ 20 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த நுவனிது ஃபெர்னாண்டோ - குசால் மெண்டிஸ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.

அதன்பின் 34 ரன்களில் குசால் மெண்டிஸ் ஆட்டமிழக்க, அடுத்து வந்த தனஞ்செய டி சில்வா ரன் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். இருப்பினும் அறிமுக வீரராக களமிறங்கிய நுவனிந்து ஃபெர்னாண்டோ அரைசதம் கடந்து அசத்தினார். அதன்பின் 50 ரன்களைச் சேர்த்த நுவனிந்து ஃபெர்னாண்டோ தேவையில்லாமல் ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.

இதையடுத்து களமிறங்கிய சரித் அசலங்கா 15, நட்சத்திர வீரர் தசுன் ஷனகா 2, வநிந்து ஹசரங்கா 21, சமிகா கருணரத்னே 17 என அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். இருப்பினும் இறுதியில் துனித் வெல்லலகே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 32 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.

Advertisement

ஆனால் பின் வரிசை வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியதால் 39.4 ஓவர்களில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 215 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ், குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகளையும், உம்ரான் மாலிக் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News