கடந்த இரண்டு வருடமாகவே மோசமான பார்மால் அவதிப்பட்டு வரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி எந்த ஒரு போட்டியிலும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு விளையாடவில்லை.

Advertisement

அடுத்த போட்டியில் சிறப்பாக செயல்படுவார். அதற்கடுத்த போட்டியில் சிறப்பாக செயல்படுவார். என்று அவர் மீது வைத்த நம்பிக்கை எல்லாம் வீணடிக்கும் வகையில் இவருடைய பேட்டிங் மிக மோசமாக இருக்கிறது. நடந்து முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் இதே நிலைமைதான் அரங்கேரியது.

Advertisement

இதன் காரணமாக இவரை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான லிமிடெட் ஓவர் தொடரில் இந்திய அணி நீக்கியுள்ளது. இந்த தொடரில் மட்டுமில்லாமல் உலகக் கோப்பை தொடரிலும் இவரை நீக்க வேண்டும் என்று விராட் கோலி அருமை தெரியாத பலர் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் ஒருசிலரோ விராட் கோலி எப்படிப்பட்ட வீரர் என்பதையும் அவரை தேவையில்லாமல் விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும் என்பதையும் தெள்ளத் தெளிவாக பேசி வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜித் அகார்கர் செய்தியாளர் சந்திப்பில் விராட் கோலியின் பங்கு எவ்வளவு முக்கியம் என்பதை விரிவாக பேசியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அஜித் அகார்கர்,“விராட் கோலி தற்போதைய சூழ்நிலையில் இருந்து தப்பிப்பதற்கான முயற்சியை செய்து கொண்டிருக்கிறார்,நிச்சயம் விராட் கோலி ரன்களை அடிப்பதற்கான திறமை படைத்தவர். விராட் கோலி தற்பொழுது நெருக்கடியான நிலையில் உள்ளார் எந்த ஒரு சிறந்த வீரரும் இதுபோன்ற நெருக்கடியை சந்தித்து தான் தீர்வார்கள், நிச்சயம் விராட் கோலி இதிலிருந்து மீண்டு வந்து அடுத்த வருடம் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பை தொடரிலும் சிறப்பாக செயல்படுவார். 

உலகக் கோப்பை தொடருக்கு முன் விராட் கோலி இந்த சிக்கலை சமாளிப்பதற்கு போதுமான நேரம் உள்ளது, விராட் கோலி போன்ற ஒரு புத்திசாலியான வீரர் இதில் நீண்ட காலம் சிக்கியிருக்க மாட்டார், இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் ஆரம்பத்தில் சிறப்பாக செயல்பட்ட விராட் கோலி, பின் அதில் தடுமாறி விட்டார். விராட் கோலி தற்பொழுது நல்ல பார்மில் இல்லை என்பது தெரிகிறது. 

Advertisement

அனைவரும் அவருடைய பார்ம் குறித்து கவலைப்படுகின்றனர். நிச்சயம் சிறந்த வீரர் இதிலிருந்து மீண்டு வருவார் இதுபோன்ற நிலைமை இனிமேலும் நீடிக்காது” என்று விராட் கோலிக்கு ஆதரவாக பேசியுள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News