முதல் டெஸ்டுக்கான பிளேயிங் லெவன்; ரிஷப் பந்த், துருவ் ஜூரெல் இடம்பெற வாய்ப்பு!
தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியாஅனது நவம்பர் 14ஆம் தேதி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கான இரு அணிகளும் அறிவிக்கப்பட்ட நிலையில், தீவிர பயிற்சிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இப்போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம். அதன்படி இப்போட்டிக்கான இந்திய அணியில் காயத்தில் இருந்து மீண்டுள்ள ரிஷப் பந்த் இடம் பிடிப்பார். முன்னதாக இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியின் போது காயத்தை சந்தித்த அவர், அதன்பின் கிட்டத்திட்ட இரண்டு மாதம் காலம் ஓய்வில் இருந்தார். பின்னர் அவர் ரஞ்சி கோப்பை தொடரின் மூலம் அவர் ஃபார்முக்கு திரும்பினார்.
மேற்கொண்டு சமீபத்தில் நடந்து முடிந்த தென் ஆப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான தொடரில் இந்திய ஏ அணியின் கேப்டனாகவும் செயல்பட்டார். இதன் காரணமாக அவர் தென் ஆப்பிரிக்க தொடக்கான இந்திய அணியில் ரிஷப் பந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளதுடன், அணியின் துணைக்கேப்டனாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் அவர் இப்போட்டிக்கான இந்திய அணியின் லெவனில் நேரடியாக இடம் பிடிப்பார்.
Also Read: LIVE Cricket Score