Manchester Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் காயம் காரணமாக களத்தில் இருந்து வெளியேறிய இந்திய வீரர் ரிஷப் பந்த், இன்று தனது காயத்தையும் பொறுட்படுத்தாமல் களமிறங்கியுள்ளார். 

Advertisement

இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கேஎல் ராகுல் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 94 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் கேஎல் ராகுல் 46 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார்.

Advertisement

மறுபக்கம் அரைசதம் கடந்து அசத்திய யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் 10 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 58 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் ஷுப்மன் கில்லும் 12 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரிஷப் பந்த் காயம் காரணமாக களத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறிய நிலையில், அரைசதம் கடந்திருந்த சாய் சுதர்ஷனும் 61 ரன்களில் நடையைக் கட்டினார். இதன் காரணமாக முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்களைச் சேர்த்திருந்தது.

இதையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை ரவீந்திர ஜடேஜா 19 ரன்களுடனும், ஷர்தூல் தாக்கூர் 19 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் ஜடேஜா 20 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதிரடியாக விளையாடிய ஷர்துல் தாக்கூரும் 41 ரன்களில் ஆட்டமிழந்தர். அதன்பின் யாரும் எதிர்பாராத வகையில் காயம் காரணமாக நேற்று பெவிலியன் திரும்பிய ரிஷப் பந்த் இன்று மீண்டும் களமிறங்கி பேட்டிங் செய்து ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றார். பின்னர் மழை குறுக்கிட்டதன் காரணமாக இரண்டாம் நாள் உணவு இடைவேளையானது முன் கூட்டியே எடுக்கப்பட்டுள்ளது. 

இதனால் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் வாஷிங்டன் சுந்தர் 20 ரன்களுடனும், ரிஷப் பந்த் 39 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

Also Read: LIVE Cricket Score

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News