தோல்வியால் கண் கலங்கிய ரோஹித் சர்மா; வைரல் காணொளி!

Updated: Thu, Nov 10 2022 18:44 IST
India Vs England Rohit Sharma Reaction After Team India Out Of T20 World Cup 2022 (Image Source: Google)

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்திய அணியும், இங்கிலாந்து அணியும் மோதின. ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்து. அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 63 ரன்களும், விராட் கோலி 50 ரன்களும் எடுத்தனர். ரோஹித் சர்மா, கே.எல் ராகுல் ஆகியோர் வழக்கம் போல் இந்த போட்டியிலும் இந்திய அணிக்கு ஏமாற்றத்தையே கொடுத்தனர்.

அதன்பின் 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்டக்கூடிய இலக்கை துரத்தி களமிறங்கிய இங்கிலாந்து அணி, முதல் ஓவரில் இருந்தே இந்திய அணியின் பந்துவீச்சை சிதறடித்து மளமளவென ரன் குவித்தது. பாரபட்சம் பார்க்காமல் அனைத்து பந்துவீச்சாளர்களின் பந்தையும் சிதறடித்த அலெக்ஸ் ஹேல்ஸ் – ஜாஸ் பட்லர் ஜோடி, பவர்ப்ளே ஓவர்களிலேயே 63 ரன்கள் குவித்து இங்கிலாந்து அணியின் வெற்றியை இலகுவாக்கியது.

புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி என அனைத்து பந்துவீச்சாளர்களின் பந்துகளையும் துவம்சம் செய்த இங்கிலாந்து அணியின் துவக்க வீரர்கள் ஜோடி விக்கெட்டையும் விட்டுகொடுக்காமல் வெறித்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் 16வது ஓவரிலேயே இலக்கை மிக மிக இலகுவாக எட்டிய இங்கிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அலெக்ஸ் ஹேல்ஸ் 47 பந்துகளில் 86 ரன்களும், பட்லர் 49 பந்துகளில் 80 ரன்களும் எடுத்தனர்.

இந்திய அணிக்கு எதிரான இந்த மிரட்டல் வெற்றியின் மூலம் இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற இங்கிலாந்து அணி, 13ஆம் தேதி நடைபெறும் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்தநிலையில், இங்கிலாந்து அணிக்கெதிரான இந்திய அணி மோசமான தோல்வியால் வேதனையடைந்த ரோஹித் சர்மா கண் கலங்கிய காணொளி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை