ஐசிசியின் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் எதிர்வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளன. மேலும் இத்தொடரில் பங்கேற்கும் அணிகள் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. 

Advertisement

இதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்று வங்கதேச அணிகளும், குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளும் இடம்பிடித்துள்ளன. இதையடுத்து இத்தொடரில் பங்கேற்கும் அணிகளை அந்தந்த கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வருகின்றன. இதில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆஃப்கானிஸ்தான், வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Advertisement

அதேசமயம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் தற்போதுவரை அறிவிக்கபடவில்லை. மேற்கொண்டு இவ்விரு அணிகளும் இந்த வார இறுதியில் அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இத்தொடருக்கான தொடக்க நிகழ்ச்சியை பிப்ரவரி 16 மற்றும் 17ஆம் தேதிகளில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது. மேலும் ஐசிசி நிகழ்வுகளில் வழக்கமான நடைமுறையான தொடக்க விழாவில் அனைத்து அணி கேப்டன்களும் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில் இந்நிகழ்ச்சியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பங்கேற்பாரா என்ற கேள்விகள் அதிகரித்துள்ளன. ஏனெனில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே இருக்கும் அரசியல் சூழ்நிலை காரணமாக இரு அணிகளும் சர்வதேச போட்டிகளில் விளையாடுவதை தவிர்த்து வருகின்றன. இருப்பினும் இவ்விரு அணிகளும் ஐசிசி நடத்தும் முக்கியமான தொடர்களில் மட்டுமே பங்கேற்று விளையாடி வருகின்றனர். 

மேலும் நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை தொடர் முதலில் பாகிஸ்தானில் மட்டுமே நடைபெற இருந்த நிலையில், பிசிசிஐ-யின் அழுத்தம் காரணமாக இத்தொடரானது ஹைபிரீட் மாடலில் நடத்த திட்டமிடப்பட்டு, இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இப்படியான சூழ்நிலையில் சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் தொடக்க நிக்ழ்ச்சியில் ரோஹித் சர்மா பங்கேற்பாரா என்பது பெரும் கேள்வியாக உள்ளது. 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

இந்நிலையில் இதுகுறித்து வெளியான தகவலின் அடிப்படையில், “சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் தொடக்க விழாவில் கலந்து கொள்ள இந்திய அணி கேப்டன் பாகிஸ்தான் செல்லவுள்ளார். மேலும் 29 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானில் ஒரு மெகா சர்வதேச கிரிக்கெட் போட்டி மீண்டும் நடைபெறுவதைக் குறிக்கும் வகையில், பிசிபி பிரமாண்டமான நிகழ்வைத் திட்டமிட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இதுகுறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News