ஐபிஎல் 2021: பிரார், பிஷ்னோய் பந்துவீச்சில் மண்ணை கவ்வியது ஆர்சிபி!

Updated: Fri, Apr 30 2021 23:26 IST
IPL 2021: Harpreet, Bishnoi spin web as Punjab Kings defeat RCB by 34 runs (Image Source: Google)


ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 26ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச தீர்மானித்து விளையாடியது. 

இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு கேப்டன் கே.எல்.ராகுல், கிறிஸ் கெய்ல் ஆகியோர் அதிரடியாக விளையாடி அணிக்கு சாதகமான ஸ்கோரை நிர்ணயித்தனர். 

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்களை சேர்த்தது . பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக கே.எல். ராகுல் 92 ரன்களையும், கிறிஸ் கெய்ல் 46 ரன்களையும் எடுத்தனர். 

அதன்பின் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு தேவ்தத் படிக்கல் 7 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த கேப்டன் கோலி 35 ரன்களில் பிரார் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த மேக்ஸ்வெல், டி வில்லியர்ஸ் ஆகியோரும் பிரார் சுழலில் பெவிலியன் திரும்பி அதிர்ச்சியளித்தனர். 

இதனால் பெங்களூரு அணியின் தோல்வி உறுதியானது. பின்னர் வந்த வீரர்களும் ரவி பிஷ்னோய் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டைழந்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி 8 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணியை வீழ்த்தி அபார வெற்றியை பதிவுசெய்து அசத்தியது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை