ஐபிஎல் 2025: விராட் கோலி, தேவ்தத் படிக்கல் அரைசதம்; ராயல்ஸுக்கு 206 டார்கெட்!

Updated: Thu, Apr 24 2025 21:19 IST
Image Source: Google

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபற்ற 42ஆவது லீக் போட்டியில் ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தின.

பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு பில் சால்ட் மற்றும் விராட் கோலி இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய இருவரும் முதல் விக்கெட்டிற்கு 61 ரன்கள் பார்ட்னர்ஷிப் சேர்த்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். இதில் பில் சால்ட் 4 பவுண்டரிகளுடன் 26 ரன்களைச் சேர்த்த கையோடு விக்கெட்டை இழந்தர். 

பின்னர் விராட் கோலியுடன் இணைந்த தேவ்தத் படிக்கல்லும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் விராட் கோலி 32 பந்துகளில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்ய, அவரைத்தொடர்ந்த் தேவ்தத் படிக்கல்லும் 26 பந்துகளில் தனது அரைசததைப் பதிவுசெய்தார். இதன்மூலம் இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 80 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், விராட் கோலி 8 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 70 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, தேவ்தத் படிக்கல் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 50 ரன்களில் ஆட்டமிழந்தார். 

Also Read: LIVE Cricket Score

அதன்பின் களமிறங்கிய கேப்டன் ரஜத் பட்டிதாரும் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ஜோடி சேர்ந்த டிம் டேவிட் - ஜித்தேஷ் சர்மா இணை அணியை வலுவான ஸ்கோரை நோக்கி அழைத்துச் என்றனர். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டிம் டேவிட் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 23 ரன்களையும், ஜித்தேஷ் சர்மா 4 பவுண்டரிகளுடன் 20 ரன்களையும் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்களைச் சேர்த்துள்ளது. ராஜஸ்தான் ரயல்ஸ் தரப்பில் சந்தீப் சர்ம 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை