இந்திய கிரிக்கெட் அணியில் சமீபகாலமாக தவிர்க்க முடியாத வீரராக இருப்பவர் யஷஸ்வி ஜெய்ஸ்வால். இவர் இந்திய அணிக்காக இதுவரை 6 டெஸ்ட், 17 டி20 போட்டிகளில் விளையாடி 1100 ரன்களைச் சேர்த்துள்ளார். அதிலும் குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் சதத்தையும், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒருசதம், ஒரு இரட்டைசதம் என விளாசி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். 

Advertisement

மேலும் இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதத்தை விளாசிய ஜெய்ஸ்வால் இந்திய அணி வெற்றிபெறுவதற்கும் முக்கிய காரணமாக அமைந்தார். இந்நிலையில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் விளையாடுவதை பார்ப்பதற்கு முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலியைப் பார்பது போல் உள்ளதாக முன்னள் வீரர் இர்ஃபான் பதான் பாராட்டியுள்ளார். 

Advertisement

இதுகுறித்து பேசிய அவர், "நான் உற்சாகமாக இருக்கும் ஒரு வீரர் இருக்கிறார், அது யாஷஸ்வி ஜெய்ஸ்வால். இப்போது அவர் ஐபிஎல்லில் எப்படி செயல்படுகிறார் என்பதைப் பார்க்க ஆர்வமாக உள்ளேன். அவர் ஒரு அற்புதமான வீரர். அவருக்கு சௌரவ் கங்குலியைப் போல் ஆஃப்-சைடில் விளையாடும் திறன் உள்ளது. ஜெய்ஸ்வால் விளையாடுவதை பார்பதற்கும் அப்படியே சௌரவ் கங்குலியை பார்ப்பது போல் உள்ளது.

நாங்கள் கங்குலியைப் பார்த்ததும் ‘ஆஃப் சைட் ராஜா’ என்று சொல்வது போல் ஜெய்வாலாலும் விளையாட முடியும். அவர் இன்னும் 10 வருஷம் விளையாடினா அவருடைய ஆட்டத்தைப் பற்றி தாதாவை எப்படி புகழ்ந்து பேசினோமோ அந்த அளவுக்குப் பேசுவோம். ஜெய்ஸ்வாலும் அப்படித்தான். மேலும் அவர் தற்போது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்து தான் திறமையை நிரூபித்துள்ளார்” என்று பாராட்டியுள்ளார். 

இதையடுத்து இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் ராஜ்கோட்டில் நடைபெறவுள்ளது. முன்னதாக இங்கிலாந்து அணிக்கெதிராக முதல் டெஸ்டில் 80, இரண்டாவது டெஸ்டில் 200 ரன்களை யஷஸ்வி ஜெய்ஸ்வால் அடித்துள்ளதால், மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் அவரது சிறப்பான ஆட்டம் தொடரும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

இந்திய டெஸ்ட் அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், கேஎல் ராகுல்*, ரஜத் பட்டிதார், சர்ஃப்ராஸ் கான், துருவ் ஜூரல், கேஎஸ் பாரத், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா*, அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஆகாஷ் தீப்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News