இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரராக அறியப்பட்டவர் இஷான் கிஷன். கடந்தாண்டு வரை இந்திய அணியின் மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் இடம்பிடித்து விளையாடி வந்த இஷான் கிஷான், தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக தனிப்பட்ட காரணங்களுக்காக தொடரில் இருந்து விலகினார். இருப்பினும் இஷான் கிஷனை உள்ளூர் போட்டிகளில் விளையாடும் படி பிசிசிஐ அறிவுறுத்தி இருந்தது. 

Advertisement

ஆனால் பிசிசிஐயின் கோரிக்கையை ஏற்க மறுத்த இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியாவுடன் இணைந்து ஐபிஎல் தொடருக்காக பயிற்சி மேற்கெண்டதும், ஸ்ரேயாஸ் ஐயர் காயத்தை காரணம் காட்டி ரஞ்சி கோப்பை தொடரில் விளையாட மறுத்ததன் காரணமாக கோபமடைந்த பிசிசிஐ அவர்கள் இருவரின் மீதும் ஒழுங்கு நடவடிக்கை மேற்கெண்டதன் விளைவாக இந்திய அணியின் ஒப்பந்த பட்டியலிலிருந்து நீக்கப்பட்டனர். இதனால் நடந்து முடிந்த ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியிலும் இவர்கள் இருவரும் புறக்கணிக்கப்பட்டனர். 

Advertisement

இதனையடுத்து சமீபத்தில் நடந்து முடிந்த புஜ்ஜிபாபு கோப்பை கிரிக்கெட் தொடரில் ஜார்கண்ட் அணிக்காக விளையாடிய இஷான் கிஷன் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டார். அதன்பிறபு துலீப் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்தியா டி அணியில் இடம்பிடித்திருந்த இஷான் கிஷான் சதமடித்து தனது கம்பேக்கை நிரூபித்தார். மேற்கொண்டு இரானி கோப்பை தொடருக்கான ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியிலும் இடம்பிடித்த அவர் முதல் இன்னிங்ஸில் 38 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

இந்நிலையில் எதிர்வரும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடருக்கான ஜார்கண்ட் அணியை அம்மாநில கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது. அதன்படி எதிர்வரும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளுக்கான ஜார்கண்ட் அணியின் கேப்டனாக இஷான் கிஷான் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி ஜார்கண்ட் அணி தங்களது முதல் போட்டியில் அசாம் அணியை எதிர்த்தும், இரண்டாவது ஆட்டத்தில் ரயில்வேஸ் அணியை எதிர்த்தும் விளையாடவுள்ளது. இப்போட்டிகளுக்கான ஜார்கண்ட் அணியின் கேப்டனாகவே இஷான் கிஷன் நியமிக்கப்பட்டுள்ளார். 

அதேசமயம் கடந்த சீசன் ரஞ்சி கோப்பை தொடரில் ஜார்கண்ட் அணியை வழிநடத்திய விராட் சிங் அணியின் துணைக்கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேசமயம் நடப்பு சீசன் ரஞ்சி கோப்பை தொடருக்கான ஜார்கண்ட் அணியில் இளம் வீரர்களான குமார் குஷாக்ரா மற்றும் அன்குல் ராய் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் அணியின் சீனியர் வீரர்களான சௌரவ் திவாரி, ஷபாஸ் நதீம் மற்றும் வருன் ஆரோன் உள்ளிட்ட வீரர்கள் ஓய்வை அறிவித்துள்ளதால், நடப்பு சீசனில் ஜார்கண்ட் அணியின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

ஜார்கண்ட் ரஞ்சி அணி: இஷான் கிஷன் (கேப்டன்), விராட் சிங் (துணை கேப்டன்), குமார் குஷாக்ரா, நஜிம் சித்திக், ஆர்யமான் சென், சரந்தீப் சிங், குமார் சுராஜ், அனுகுல் ராய், உத்கர்ஷ் சிங், சுப்ரியோ சக்ரவர்த்தி, சௌரப் சேகர், விகாஸ் குமார், விவேகானந்த் திவாரி, மனிஷி, ரவி குமார் யாதவ், ரௌனக் குமார்

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News