இந்திய கிரிக்கெட் அணி, தற்போது கேப்டன்ஸி சர்ச்சையில் சிக்கி தள்ளாடி வருகிறது. ஒருநாள் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி, எந்த வித முன் அறிவிப்புமின்றி நீக்கப்பட்டது தான் சர்ச்சைகளை ஆரம்பித்து வைத்தன. அவருக்கு பதிலாக இனி டி20 மற்றும் ஒருநாள் ஃபார்மட்டுகளுக்கு ரோகித் சர்மா, கேப்டனாக செயல்பட உள்ளார்.

Advertisement

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ-யின் இந்த முடிவுக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பி வருகின்றன. ஒரு தரப்பு, இந்தியாவின் மிகச் சிறந்த வீரர் கோலி. அணிக்காக அவர் தலைமை பொறுப்பு வகித்து பல வெற்றிகளைத் தேடித் தந்துள்ளார். அப்படி பட்டவர் அவமதிக்கப்பட்டு விட்டார் என்று சொல்லப்படுகிறது. மறுதரப்பில் ரோஹித் கேப்டன்சிக்கு தகுதியனவர் என்று கூறப்படுகிறது.

Advertisement

இந்நிலையில் பிசிசிஐ-யின் முடிவுக்கு ஆதரவளிக்கும் வகையிலும், விராட் கோலியை மறைமுகமாக விமர்சிக்கும் விதத்திலும் இந்திய அணியின் முன்னாள் வீரரும், இன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கவுதம் கம்பீர் பேசியுள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், "தற்போது இந்திய அணிக்கு இரண்டு வித கேப்டன்கள் இருப்பது நல்ல விஷயம் என்று கருதுகிறேன். டி20 மற்றும் ஒருநாள் ஃபார்மட்டுகளில் அணியைத் திறம்பட உருவாக்குவதிலும் வழிநடத்துவதிலும் ரோஹித்துக்குப் போதுமான கால அவகாசம் கிடைக்கும்.

ரோகித் சர்மா, ஒரு கேப்டனாக இந்தியாவுக்காக சிறப்பாக செயல்படுவார் என நான் நம்புகிறேன். என்னைப் பொறுத்தவரை டி20 மற்றும் ஒருநாள் ஃபார்மட்டுகளில் இந்திய அணி மிகவும் பாதுகாப்பான கரங்களில் உள்ளன. இதுவரை 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளார் ரோஹித். அது நமக்கு உணர்த்துவது ஒன்று தான். மற்ற கேப்டன்களை விட ரோகித் எதையோ ஒன்றை மிகச் சரியாக செய்கிறார்.

ரோஹித் எப்போதும் சாந்தமாகவும் அமைதியாகவும் செயல்படக் கூடியவர். இதனால் தன்னைச் சுற்றி அனைத்தையும் ரிலாக்ஸாக வைத்திருப்பார். அவர் எப்போதும் தனக்கு கீழ் விளையாடும் வீரர்களை அழுத்தத்திற்கு உள்ளாக்க மாட்டார். அவர் பொதுவாகவே ரிலாக்ஸாக இருக்கும் கேரக்டர் என்பதால் மொத்த அணியும் அதிலிருந்து பயன் பெறும்" என்று கூறியுள்ளார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News